விரக்தியின் விளிம்பிலிருந்து தான் கூச்சலிடுகிறாரா தமிழருவி மணியன்?

 

விரக்தியின் விளிம்பிலிருந்து தான் கூச்சலிடுகிறாரா தமிழருவி மணியன்?

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கியவுடன் பேரெழுச்சி ஏற்படும். அவர் பின்னால் ஒரு பெருங்கூட்டம் வந்து சேர்ந்துவிடும். ரஜினியும் மக்களும் எதிர்ப்பார்க்கும் அதிசயம் நிகழும் என்று சொன்னார் ரஜினி கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன்.

மேலும், அந்த கட்சியை விமர்சித்தோ இந்த கட்சியை விமர்சித்தோ வழக்கமான அரசியல் செய்ய வரவில்லை. தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை சொல்லித்தான் அவர் பிரச்சாரம் செய்யப்போகிறார் என்றும் தெரிவித்தார் தமிழருவி.

விரக்தியின் விளிம்பிலிருந்து தான் கூச்சலிடுகிறாரா தமிழருவி மணியன்?

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, ‘’இதையே தான் ஜனதா தளத்திலிருந்து லோக்சக்தி தொடங்கிய போதும் சொன்னார். திமுகவில் சிறுசேமிப்பு திட்டத்துணைத்தலைவராக இருந்தபோதும் சொன்னார். காந்திய மக்கள் இயக்கம் தொடங்கியபோதும் சொன்னார்.
விரக்தியின் விளிம்பிலிருந்து தான் எப்போதும் தரகு வியாபாரி தமிழருவி மணியன் கூச்சலிடுவார்’’ என்று சொல்லி இருக்கிறார்.