மொட்டை மாடியில் இருந்து விழுந்து 18 மாத குழந்தை உயிரிழப்பு

 

மொட்டை மாடியில் இருந்து விழுந்து 18 மாத குழந்தை உயிரிழப்பு

ஆண்டிபட்டி அடுத்த கருத்தமலைப்பட்டியை சேர்ந்த தியாகராஜனின் 18 மாத குழந்தை மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.

மொட்டை மாடியில் இருந்து விழுந்து 18 மாத குழந்தை உயிரிழப்பு

மாடி வீடு கட்டு வரும் தியாகராஜன், மொட்டை மாடிக்கு செல்ல கைப்பிடிச்சுவர் கட்டி வந்துள்ளார். சிமெண்ட் பூச்சு பூசாமல் இருந்ததால் மழை பெய்தலில் பலம் இல்லாமல் இருந்துள்ளது.

மொட்டை மாடியில் குழந்தை யோகேஸ்வரனை வைத்துக்கொண்டு குடும்பத்தினர் விளையாடுவது வழக்கம். அப்படித்தான் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது படிக்கட்டில் விழுந்துள்ளது குழந்தை. படிக்கட்டுகளின் கைப்பிடிச்சுவர் பலமாக இருந்தால் படிக்கட்டிகளில் கிடந்திருக்கும் குழந்தை. ஆனால் அந்த கைப்பிடிச்சுவர் பலம் இல்லாமல் இருந்ததால் கைப்பிடிச்சுவர் இடிந்து குழந்தை கீழே விழுந்துவிட்டது.

படுகாயமடைந்த கிடந்த குழந்தையை தூக்கிக்கொண்டு தேனி அரசு மருத்துமனைக்கு ஓடினர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அக்குழந்தை ஏற்கனற உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கவும், பெற்றோர் கதறி அழுதனர்.