முதல்வர் ஏன் நழுவுகிறார்.. ஓபிஎஸ் ஏன் அப்படிச்சொன்னார்? நாஞ்சில் போட்ட குண்டு

 

முதல்வர் ஏன் நழுவுகிறார்.. ஓபிஎஸ் ஏன் அப்படிச்சொன்னார்? நாஞ்சில் போட்ட குண்டு

நேற்று முன் தினம் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது, அது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’அவர் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. அறிக்கை வரட்டும். அதை படித்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன்’’என்றார். ஆனால், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அதே கேள்வியை முன்வைத்தபோது, ‘’அவர் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன்’’என்றார். ரஜினி கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, ‘’அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பிருந்தால் அதுவும் நடக்கும்’’ என்று தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.

முதல்வர் ஏன் நழுவுகிறார்.. ஓபிஎஸ் ஏன் அப்படிச்சொன்னார்? நாஞ்சில் போட்ட குண்டு

அதிமுகவின் இரு பெரும் தலைவர்களிடம் இருந்தும் இப்படி மாறுபட்ட கருத்து வெளிவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அவர். அவரின் கருத்தையும் அனைவரும் ஏற்கிறோம்’’என்றார்.

ரஜினியின் அறிவிப்பு குறித்து மீண்டும் நேற்று முதல்வரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘’அவர் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும். அப்புறம் கருத்து சொல்கிறேன்’’என்றார். அறிக்கையை படித்துவிட்டு சொல்கிறேன் என்றவர், இப்போது கட்சியை பதிவு செய்யட்டும் அப்புறம் சொல்கிறேன் என்கிறாரே இவர் நழுவுகிறார் என்று நினைத்த செய்தியாளர்கள், முதல்வரை நோக்கி அடுத்த கொக்கியை போட்டு இழுத்தார்கள்.

ரஜினி கட்சி குறித்து நீங்கள் கருத்து சொல்லுவதை தட்டிக்கழிக்கிறீர்கள். ஆனால், ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என்கிறாரே துணைமுதலவர். உங்களுக்குள் ஏன் இந்த முரண்பாடு? என்று கேட்டதும், ‘’அவரோ கருத்தை அவர் சொல்லி இருக்கிறார். கருத்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம் இல்லையா. இப்படியெல்லாம் கேட்டால் எப்படி…’’என்று கேட்டு, சிரித்து சமாளித்தார் முதல்வர்.

முதல்வர் ஏன் நழுவுகிறார்.. ஓபிஎஸ் ஏன் அப்படிச்சொன்னார்? நாஞ்சில் போட்ட குண்டு

முதல்வர் இப்படி ரஜினி விசயத்தில் நழுவிச்செல்லும்போது, அதிமுகவுக்குள் துணைமுதல்வர் ஓபிஎஸ் மட்டும் ஏன் அப்படிச்சொன்னார்? என்ற கேள்விக்கு,
’’அதிமுகவில் இருக்கும் ஓபிஎஸ் ஒரு ஆர்.எஸ்.எஸ். பேர்வழி. அதனால்தான் அவர் அப்படிச்சொன்னார்’’ என்று சொல்லி இருக்கிறார் தற்போதைய திமுக பிரமுகர் நாஞ்சில்சம்பத்.