ரஜினிக்கு ஒரு கோடி இளைஞர்கள் வாக்கு உறுதியாகிவிட்டது.. எஸ்.வி.சேகர்

 

ரஜினிக்கு ஒரு கோடி இளைஞர்கள் வாக்கு உறுதியாகிவிட்டது.. எஸ்.வி.சேகர்

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

இயக்குநரும் நடிகருமான மனோபாலா, ’’பிரமாண்ட அரசியல் என்ட்ரிக்கு வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்’’ என்று தெரிவித்துள்ளார். ’’மிக்க நன்றி தலைவா. இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி. இந்த தருணத்திற்காக காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேற நான் ராகவேந்திரா சாமியிடம் பிரார்த்தனை செய்கிறேன். கடுமையான இந்த கொரோனா நெருக்கடியிலும் நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்திருக்கிறீர்கள். உங்களின் கனவு நிச்சயமாக நிறைவேறும்’’என்று நடிகர் ராகவா லாரன்சும்,’’இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்’’என்று இசையமப்பாளர் அனிருத்தும்,’’Wow……. Thalaivaaaaa வா தலைவா’’என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.

ரஜினிக்கு ஒரு கோடி இளைஞர்கள் வாக்கு உறுதியாகிவிட்டது.. எஸ்.வி.சேகர்

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு, ’’நல்ல முடிவை எடுத்திருக்கிறீர்கள். புதிய ரோல் எடுத்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எப்போதும் போலவே இந்த ரோலிலும் உங்கள் திறைமையை காட்டுவார்கள். வாழ்த்துக்கள்’’ என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அதுபோலவே பாஜக பிரமுகரும், நடிகருமான, ‘’சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் வெற்றி உறுதியாகிவிட்டது. நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஆன்மீக அரசியல் நிச்சயம் உருவாகும். அந்த அதிசயம் நிகழும். இந்த கொள்கைக்காகவே ரஜினிக்கு ஒரு கோடி இளைஞர்களின் வாக்கு உறுதியாகிவிட்டது’’ என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

ரஜினிக்கு ஒரு கோடி இளைஞர்கள் வாக்கு உறுதியாகிவிட்டது.. எஸ்.வி.சேகர்