புத்தர், அரிச்சந்திரன் போல பேசிவரும் ஸ்டாலின் விரைவில் சிக்குவார்.. முதல்வர் பதிலடி

 

புத்தர், அரிச்சந்திரன் போல பேசிவரும் ஸ்டாலின் விரைவில் சிக்குவார்.. முதல்வர் பதிலடி

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது, அதிமுகவையும், அதிமுக அமைசர்கள் மீதும் தொடர்ந்து ஊழல் புகார் வாசித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டு வெளு வெளு என்று வெளுத்தார்.

புத்தர், அரிச்சந்திரன் போல பேசிவரும் ஸ்டாலின் விரைவில் சிக்குவார்.. முதல்வர் பதிலடி

‘’ஊழலில் திளைத்தூப்போன ஸ்டாலினுக்கு அதிமுக ஆட்சி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அதிமுக ஆட்சியில் அந்த ஊழல் இந்த ஊழல் என்று நாள்தோறும் அறிக்கை விடுகிறார் ஸ்டாலின். அறிக்கை நாயகன் என்று சொல்லும் அளவிற்கு அவரது அறிக்கை வராத நாளே இல்லை.

புத்தர், அரிச்சந்திரன் போல பேசிவரும் ஸ்டாலின் விரைவில் 2ஜி வழக்கில் சிக்குவார். 2ஜியில் தமிழகத்தோட ஒட்டுமொத்த பட்ஜெட் தொகை ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாயினை ஊழல் செய்திருக்கிறது திமுக. இந்த ஊழலில் இருந்து 200 கோடி ரூபாய் திமுகவின் குடும்ப தொலைக்காட்சிக்கு கை மாறியிருக்கிறது.

அதுமட்டுமா, திமுக ஆட்சியின் போது புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்காக 230 கோடிக்கு ஒப்பந்த போட்டுவிட்டு கடைசியில் 410 கோடி ( கலை இயக்குநர் தோட்டா தரணியை வைத்து செட் போட்டது உட்பட)என்று கணக்கு காட்டி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஊழல்களை எல்லாம் செய்துவிட்டு அதிமுக ஆட்சியை குறை கூற ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது’’என்றார்.