செய்தியாளரை மிரட்டிய கனிமொழி!

 

செய்தியாளரை மிரட்டிய கனிமொழி!

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற திட்டத்தினை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது திமுக.

கனிமொழி எம்.பி.யும் இந்த பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார். கடந்த 1ம் தேதி அன்று முதல்வர் பழனிச்சாமியின் தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரத்தினை தொடங்கினர். ஈரோட்டில் நேற்று மூன்றாவது நாள் பிரச்சாரத்தினை மேற்கொண்டார்.

வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் குறைகள் எல்லாம் சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்.

நேற்று சத்தியமங்களத்தில் பூ மார்க்கெட் சென்ற கனிமொழி, பூ வியாபாரிகளையும், பூ விவசாயிகளையும் சந்தித்து பேசினார்.

செய்தியாளரை மிரட்டிய கனிமொழி!

திமுகவினர் அதிக அளவில் திரண்டதால், மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் அதிகமானது. பலரும் முக கவசம் அணியாமலேயே இருந்தனர். சமூக இடைவெளி எல்லாம் காற்றில் பறக்கவிட்டுத்தான் நெருக்கி தள்ளினர்.

ஒவ்வொரு பூ கடையிலும் பூக்களை கையில் எடுத்து விளைச்சல் குறித்தும் விற்பனி குறித்தும் விசாரித்துக் கொண்டிருந்தார் கனிமொழி. அப்போது, ஒரு செய்தியாளர்கள் அவரை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால், ஒருவரை மட்டும் என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை. ‘வெளியே போ…’என்று சத்தம் போட்டுச்சொன்னார். அவர் அதிர்ச்சியில் அப்படியே நிற்கவும், ‘வெளியே போறியா இல்லையா..’ என்று கை நீட்டி மிரட்டினார்.

செய்தியாளரை மிரட்டிய கனிமொழி!

நான் செய்தியாளர்….நான் எதற்கு வெளியே போகணும்.. என்று அந்த நபர் சொல்லவும், ‘செய்தியாளரா…’ என்று முணு முணுத்தபடியே பூக்கடையில் ரோஜா பூக்கள் வாங்குவது மாதிரி போஸ் கொடுத்தார்.

கனிமொழியின் ஆவேசத்தால் திமுகவினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதி்யில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.