எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் மலரச்செய்வார் ரஜினி… சைதை துரைசாமி

 

எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் மலரச்செய்வார் ரஜினி… சைதை துரைசாமி

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

’’ஆன்மீகத்தையும் அரசியலையும் தனியாக பார்க்க வேண்டும். அரசியலோடு ஆன்மீகம் என்பது சுயநலம். தன் மீது காவி சாயம் பூச வேண்டாம் என்று ரஜினி சொன்னாலும் அதுதான் நடக்கும்’’ என்று தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் மலரச்செய்வார் ரஜினி… சைதை துரைசாமி

’’ரஜினியின் காலங்கடந்த அறிவிப்பு எந்த பயனையும் தராது.’’ என்றும், ’’மூன்று மாதங்களுக்குள் கட்சிதொடங்கி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.’’ என்றும் தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.

’’ஆன்மீக அரசியலில் வருகை நிச்சயம். ஆன்மிக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்று இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் தெரிவித்திருக்கிறார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர பற்றாளரும், முன்னாள் சென்னை மேயருமான சைதை துரைசாமி, ‘’எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச்செய்ய ரஜினிகாந்த் வந்திருப்பதை வரவேற்கிறேன். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவர் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளவர், ‘’கொரோனா காலத்திலும் உடல் நலத்தினை பற்றி கவலைப்படாமல் அரசியலுக்கு வந்திருப்பதை வரவேற்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.