விஜய் கட்சி தொடங்க நெருக்கடி: மொட்டை அடித்து ரசிகர்கள் பிரார்த்தனை

 

விஜய் கட்சி  தொடங்க நெருக்கடி: மொட்டை அடித்து ரசிகர்கள் பிரார்த்தனை

விஜய்யை வைத்து அரசியல் கட்சி தொடங்குவதாத அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்ததால் பல்வேறு சர்ச்சை எழுந்தது. தனது ஆலோசனை இல்லாமல் தந்தை தனது விருப்பப்படி செய்கிறார். அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய விஜய், தந்தை ஆரம்பித்த கட்சியை அடியோடு கலைக்க வைத்துவிட்டார்.

அரசியல் கட்சி தொடங்கும் எண்ணமும் விஜய்க்கு இருக்கிறது. ஆனால், அவர் சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டு வரும் வேளையில், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோயிலில் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தியுள்ளனர்.

விஜய் கட்சி  தொடங்க நெருக்கடி: மொட்டை அடித்து ரசிகர்கள் பிரார்த்தனை

பல்வேறு காரணங்களைச்சொல்லி இழுத்தடித்துக்கொண்டே வந்ததால் ரஜினிகாந்த் கட்சி தொடங்க மாட்டார் என்றே அவரது ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் இன்று அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் கட்சி தொடங்க வேண்டும் என்று கூறி, அவரது ரசிகர்கள் மயிலாடுதுறை ரங்கநாதர் கோயிலில் மொட்டை அடித்து வேண்டுதல் செய்துள்ளனர்.

விஜய் ரசிகர்களின் இந்த வேண்டுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.