“உறவினர்களெல்லாம் என்னை உரசிகிட்டே இருப்பானுங்க ” -டீனேஜ் பெண்ணின் வேதனை.

 

“உறவினர்களெல்லாம் என்னை உரசிகிட்டே இருப்பானுங்க ” -டீனேஜ் பெண்ணின் வேதனை.

தன்னுடைய தந்தையின் உறவினர்களிடம் தன்னை விற்க முயன்றதாகவும் , உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும்  ஒரு பெண் அவரின் தந்தை மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

“உறவினர்களெல்லாம் என்னை உரசிகிட்டே இருப்பானுங்க ” -டீனேஜ் பெண்ணின் வேதனை.

ராஜஸ்தானில் உள்ள பார்மர் மாவட்டத்தில் வசிக்கும்  18 வயதான டீனேஜ் பெண் தனது தாயுடனும் ,தந்தையுடனும் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணின் தாயாரை அந்த பெண்ணின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப சண்டையில்  தீ வைத்து கொளுத்திவிட்டார் .அதன் பிறகு அந்த டீனேஜ் பெண் தன்னுடைய தந்தை மற்றும் அவர்களின் உறவினர் ஆதரவோடு வாழ்ந்து வந்தார் .

அப்போது அவரின் தந்தையின் உறவினர்கள் சிலரிடம் அந்த பெண்ணை அவரின் தந்தை  விற்க முயன்றுள்ளார் .மேலும் அவர்களால் மன ரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் அவர் சித்திரவதைப்பட்டுள்ளார் .அதனால் அவர் அவர்களிடமிருந்து தப்பி சென்று அவரின் தாய்  வழி உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அதன் பிறகு அவரின் தந்தை அவரின் தாய் வழி உறவினர்கள் மீது கடத்தல் புகாரை பதிவு செய்தார்.

அதன் பிறகு அவரின் தந்தை மற்றும் அவரின் உறவினர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து கடத்தி செல்ல முற்ப்பட்டுள்ளார்கள் .இதனால் மிகவும் பயந்து போன அந்த பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவரின் தந்தை மீதும் அவரின் உறவினர்கள் மீதும் கடத்தல்  புகார் கூறியுள்ளார் .மேலும் அந்த பெண்ணை ஒரு அறையில் வைத்து பல நாட்கள் பூட்டி வைத்ததாகவும் ,மீண்டும் தந்தையிடம் சென்றால் தன்னை விற்று விடுவாரென்றும் அவர் கூறினார் .இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் தந்தையை பிடித்து விசாரித்து வருகிறார்கள்

“உறவினர்களெல்லாம் என்னை உரசிகிட்டே இருப்பானுங்க ” -டீனேஜ் பெண்ணின் வேதனை.