சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்!

 

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்!

இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேரும் கேஎம்சி மருத்துவமனையில் 3 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.