கொரோனா தொற்றால் 18 மாத குழந்தை பலி : விழுப்புரத்தில் சோகம்!

 

கொரோனா தொற்றால் 18 மாத குழந்தை பலி : விழுப்புரத்தில் சோகம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் 18 மாத குழந்தை பலி : விழுப்புரத்தில் சோகம்!

நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 23பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது.  இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 51,699பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் 18 மாத குழந்தை பலி : விழுப்புரத்தில் சோகம்!

இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 மாத ஆண் குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த துயரை தாங்க முடியாமல் கதறி அழுதனர். அதேபோல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 13 வயது சிறுவனும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.