17வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

 

17வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

17வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த இடையளர்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (20), இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டார். இதனிடையே சிறுமியின் பெற்றோர், அவரை காணவில்லை என புகார் அளித்தனர். 2வாரங்கள் கழித்து சிறுமி காவல்துறையினரால் மீட்கப்பட்டார். விசாரணையில், கார்த்தி திருமணம் செய்து, அதன்பின் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கார்த்தி மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், கார்த்திக்-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி பரிந்துரைத்தார்.