அரசு எடுத்த அதிரடி : அதிர்ச்சியில் அன்புமணி

 

அரசு எடுத்த அதிரடி : அதிர்ச்சியில் அன்புமணி

டிசம்பர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31ம்தேதி வரையிலும் இடஒதுக்கீடு போராட்டத்தினை நடத்துவது என்று முடிவெடுத்திருந்த பாமக இன்று முதல் நாள் போராட்டத்தினையும் தொடங்கி இருக்கிறது. ஆனால், அரசு முதல் நாள் போராட்டத்தை முடக்கியதோடு அல்லாமல், தொடந்து நடத்த முடியாமலும் அதிரடி நடவடிக்கை எடுத்து பாமகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

அரசு எடுத்த அதிரடி : அதிர்ச்சியில் அன்புமணி

தமிழகம் முழுவதிலும் இருந்து பாமகவின வந்து சென்னையில் குவிந்து ஸ்தம்பிக்க வைத்து தமிழகத்தை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் திட்டம் என்கிறார்கள். அதை முன்னிட்டு, இன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுத்தனர். அவர்களை எல்லாம் பெருங்களத்தூர், தாம்பரம், பூந்தமல்லி, செங்குன்றம், கானாத்தூர், நசரத்பேட்டை ஆகிய எட்டு இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து சென்னைக்குள் நுழையும் பாமகவினரை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அரசு எடுத்த அதிரடி : அதிர்ச்சியில் அன்புமணி

இதனால் ஆவேசம் அடைந்த பாமகவினர் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும், பஸ் மற்றும் ரயில் மீது கல்வீசி பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையில் கூடிய பாமகவினரை கண்காணிக்க 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் போராட்டத்திற்கே இப்படி என்றால் மொத்தம் ஐந்து நாள் போராட்டம் என்று அறிவித்திருக்கிறது பாமக.

கார், வேன்களில் கொடி கட்டிக்கொண்டு வந்தால் போலீசார்பிடித்து விடுகிறார்கள் என்பதால், கட்சி டீ சர்ட் போட்டு வராமல் பேருந்து வரச்சொல்லி இருக்கிறார்கள் பாமக நிர்வாகிகள். உளவுத்துறை மூலம் இதை அறிந்து கொண்ட போலீசார், பேருந்துகளில் வருவோரையும் விசாரித்து அல்லேக்காக தூக்கி விடுகிறது. லாட்ஜ்களிலில் சோதனை செய்தும் பாமகவினர் இருந்தால் அலேக்காக அள்ளிக்கொண்டு போய்விடுகிறது போலீஸ்.

அரசு எடுத்த அதிரடி : அதிர்ச்சியில் அன்புமணி

இரவுக்குள் எப்படியாவது சென்னைக்குள் பாமகவினரை கொண்டுவந்துவிட வேண்டும் ஓவ்வொரு மாவட்ட நிர்வாகிக்கும் தகவல் பறந்திருக்கிறது. ஆனால் விடிய விடிய போலீசார் நடத்திய அதிரடியால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டது.

சென்னையை ஸ்தம்பிக்க செய்வது பாமகவின் திட்டமென்றாலும் அதனால் அசம்பாவீதம் ஏதும் நிகழ்ந்துவிடும் என்பதால் உஷார் நிலையில் இருக்கிறது காவல்துறை.

இந்நிலையில், டிசம்பர் 31ம்தேதி வரையிலும் சென்னையில் 144 தடை உத்தரவினை பிறப்பித்திருக்கிறார் சென்னை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்.

அரசு எடுத்த அதிரடி : அதிர்ச்சியில் அன்புமணி

டிசம்பர் 1ம்தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலும் அனைத்து பணி நாட்களிலும் சென்னையில் உள்ளடிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாமக முடிவு செய்திருந்த நிலையில், இம்மாதம் 31ம்தேதி வரையிலும் போராட்டத்தை அறிவித்திருக்கும் நிலையில், இம்மாதம் 31ம் தேதி வரைக்கும் சென்னையில் 144 தடை விதிக்கப்பட்டிருப்பது பாமகவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. போராட்டத்தினை முன்னெடுத்து சென்றுகொண்டிருந்த அன்புமணிக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.