ஏழு வருசமா காதலிச்சுட்டு வேறு ஒருத்தியோட கல்யாணமா.. கூலிப்படையை ஏவிய காதலி

 

ஏழு வருசமா காதலிச்சுட்டு வேறு ஒருத்தியோட கல்யாணமா.. கூலிப்படையை ஏவிய காதலி

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரியாஸ் அகமது, நேற்று இரவு எம்.ஜி.ஆர். நகரில் இருந்த தன் வீட்டில் இருந்து ஏமப்பேருக்கு டூவீலரில் சென்றிருக்கிறார். அப்போத் ஒரு கும்பல் இவரை பின் தொடர்ந்து சென்றிருக்கிறது.

தன்னை ஒரு கும்பல் பின் தொடர்ந்து வருவதை உணர்ந்த ரியாஸ் அகமது சந்தேகப்பட்டு டூவீலரை ஓரிடத்தில் நிறுத்த முற்பட்டபோது, பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், ரியாஸ் அகமதுவை சரமாரியாக வெட்டி உள்ளார்கள். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்ததால் 6 பேரும் தப்பிவிட்டனர்.

ஏழு வருசமா காதலிச்சுட்டு வேறு ஒருத்தியோட கல்யாணமா.. கூலிப்படையை ஏவிய காதலி

சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரியாஸ் அகமது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையில், சென்னையை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர்தான் கூலிப்படையை ஏவி விட்டது தெரியவந்துள்ளது.

சென்னையில் அப்பெண்ணை ரியாஸ் அகமது ஏழு வருடங்களாக காதலித்து வந்ததாகவும், கடந்த மாதம் திடீரென்று வீட்டினர் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார் ரியாஸ்.

ஏழு வருடமாக தன்னை காதலித்துவிட்டு, திடீரென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரம் அடைந்த அப்பெண் கூலிப்படையை ஏவி காதலனை கொலை செய்ய துணிந்திருக்கிறார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.