மதம் மாற மறுத்ததால் மிரட்டல்கள், சித்திரவதைகள்.. பிரபல இசையமைப்பாளரின் மனைவி பரபரப்பு புகார்

 

மதம் மாற மறுத்ததால் மிரட்டல்கள், சித்திரவதைகள்.. பிரபல இசையமைப்பாளரின் மனைவி பரபரப்பு புகார்

மதம் மாற மறுத்ததால் விவாகரத்து செய்துவிடுவோம் என்று வந்த மிரட்டல்களையும், அனுபவித்த சித்திரவதைகளையும் பற்றி மறைந்த பிரபல இசையமைப்பாளரின் மனைவி மனம் திறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலிவுட் இசையமைப்பாளர் வஜித்கான். மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்த வஜித்கான் கடந்தை ஐந்து மாதங்களுக்கு முன்பாக மாரடைப்பினால் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி கமல்ருக்கான் வஜித்கானை காதல் திருமணம் செய்துகொண்டும் தான் நிம்மதியாக வாழவில்லை என்று தனது கவலையை டுவிட்டர் மூலமாக மனம் திறந்து பேசியுள்ளார்.

மதம் மாற மறுத்ததால் மிரட்டல்கள், சித்திரவதைகள்.. பிரபல இசையமைப்பாளரின் மனைவி பரபரப்பு புகார்

தான் ஒரு பார்சி இனத்தை சேர்ந்தவர் என்றும், கல்லூரியில் படித்தபோது வஜித்கானை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ள கமல்ருக்கான், திருமணத்திற்கு பின்னர் கணவரின் குடும்பத்தினரால் தன் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

படித்த படிப்புக்கும், சுய சிந்தனைக்கும் அவர்கள் மதிப்பு கொடுக்கவில்லை. இது எல்லாவற்றுக்கும் மேல் என்னை இஸ்லாம் மதத்திற்கு மாறச்சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

நான் இஸ்லாம் மதத்திற்கு மாற்ர மறுத்ததும், எனக்கும் கணவருக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தி, விவகாரத்து செய்துவிடுவதாக கணவர் குடும்பத்தினர் மிரட்டினார்கள். ஆனால், நான் சுயமரியாதை இழக்க விரும்பவில்லை. மதம் மாறுவதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

மதம் மாற மறுத்துவிட்டதால் என்னை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்தார்கள். கணவர் இறந்துவிட்ட பின்னர், 16வயதுமகள் அர்ஷி, 9வயது மகன் ரிஹானுடன் வாழ்ந்து வருகிறேன்.

கணவர் மறைந்த பின்னரும் அவரது குடும்பத்தினரால் இப்போது மதம் மாறச்சொல்லி வரும் வற்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

இந்த காலத்திலும் மதத்தின் பெயரால் ஒரு பெண்ணுக்கு இத்தனை கொடுமைகள் எல்லாம் வெட்கக்கேடானது என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.