ஒரு வாரமாக தனிமையில் இருக்கும் நடிகர் சிவக்குமார்

 

ஒரு வாரமாக தனிமையில் இருக்கும் நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார் தி.நகரில் உள்ள தனது லட்சுமி இல்லத்தில் ஒரு வாரமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கொரோனா தொற்றின் பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநி்லங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரைக்கும் 2,14,577 பேர் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர். 3,837 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு வாரமாக தனிமையில் இருக்கும் நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது தி.நகர் லட்சுமி இல்லத்தில் தன்னை ஒரு வாரமாக தனிமைப் படுத்திக்கொண்டிருக்கிறார் என்றும் தகவல். மேலும், மருத்துவர்களின் மேற்பார்வையில் சிவக்குமார் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தகவல்.