மருமகளை அழ வைத்த மாமனார்; ஆத்திரப்பட்ட மகன் துப்பாக்கிக்கு பலி்யான பரிதாபம்

 

மருமகளை அழ வைத்த மாமனார்; ஆத்திரப்பட்ட மகன் துப்பாக்கிக்கு பலி்யான பரிதாபம்

இரண்டு மகன்கள், மனைவியுடன் வாழ்ந்த வந்த அந்த 56 வயது நபர், தனது மூத்த மகனுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் மனைவியுடன் அந்த இளைஞரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்து மருமகள் மீது ஆசை கொண்டிருக்கிறார் மாமனார். அதற்கான நேரத்தையும் எதிர்பார்த்திருந்த அவர், கடந்த 25ம் தேதி அன்று உறவினர்கள் திருமணத்திற்கு எல்லோரும் புறப்பட்டபோது மருமகள் வீட்டிலேயே இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று மாமனாரும் வீட்டிலேயே தங்கிவிட்டார்.

மருமகளை அழ வைத்த மாமனார்; ஆத்திரப்பட்ட மகன் துப்பாக்கிக்கு பலி்யான பரிதாபம்

அதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு எல்லோரும் திருமணத்திற்கு சென்றுவிட்டனர். எல்லோரும் போன பிறகு மருமகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார் மாமனார்.

திருமணம் முடிந்து வந்த மாமியாரிடமும் கணவன், கொளுந்தனிடமும் இதைச்சொல்லி அழுதிருக்கிறார் அந்த இளம்பெண். அப்போது குடும்பத்திற்குள் பெரும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.

ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த கணவன், போலீசில் சொல்லி உன்னை உள்ளே தள்ளுறேன் என்று தந்தையை எச்சரித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றிருக்கிறார்.

அப்போது யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத வகையில், துப்பாக்கியை எடுத்து தந்தை சுட்டதில் அந்த இடத்திலேயே துடிதுடித்து மகன் உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேத்தில் மொராதாபாத் மாவட்டத்தின் மஜோலா அனுமன் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மகனை சுட்டுக்கொன்ற தந்தை கைது செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. அமித்குமார் ஆன்ந்த் தெரிவித்துள்ளார்.