தோழியை கரெக்ட் செய்த தந்தை; ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்..

 

தோழியை கரெக்ட் செய்த தந்தை; ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்..

தென்காசி மாவட்டம் கடையத்தில் நேற்று முன் தினம் மாலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தந்தை தங்கராஜை மகன் திருக்குமரன் அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

தந்தையை கொலை செய்துவிட்டு பாவூர் சத்திரம் போலீசில் தானாகவே சென்று சரணடைந்தார் திருக்குமரன்.

தந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசாரின் விசாரணையில் சொத்துக்காக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

தோழியை கரெக்ட் செய்த தந்தை; ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்..

திருக்குமரனின்(வயது43) பள்ளித்தோழி சண்முகசுந்தரி(வயது43). ஒரே ஊரைச்சேர்ந்த சண்முகசுந்தரிக்கும் திருக்குமரனின் தந்தை தங்கராஜ்(வயது70)க்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் முதல் மனைவியிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளார்.

சண்முகசுந்தரியுடன் உள்ள நெருக்கத்தினால் ஒரு கட்டத்தில் முதல் மனைவியை பிரிந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே சண்முகசுந்தரியை திருமணம் செய்துகொண்டார் தங்கராஜ்.

திருக்குமரன் திருமணமாகி தனியே வசித்து வருகிறார். இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது சொத்தை பிரித்து தர பிரச்சனை எழுந்திருக்கிறது. அதையடுத்து முதல் மனைவிக்கு 15 ஏக்கர் நிலமும், இரண்டாவது மனைவி சண்முகசுந்தரிக்கும் 25 ஏக்கர் நிலமும் பிரித்துக் கொடுத்திருக்கிறார் தங்கராஜ்.

தாயை விட்டு பிரிந்து தன் தோழியை திருமணம் செய்த ஆத்திரத்தில் இருந்த திருக்குமரன், இரண்டாவதாக வந்தவளுக்கு 25 ஏக்கர் நிலமா? மேலும் ஆத்திரமாகியதால்தான் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்திருக்கிறார்.

சொத்துக்காக தந்தையை மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் தென்காசி மாவட்டத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.