அவர் எதற்காக விளக்கு பிடிக்கிறார்? ஆத்திரத்தின் உச்சிக்கே போன திமுக

 

அவர் எதற்காக விளக்கு பிடிக்கிறார்? ஆத்திரத்தின் உச்சிக்கே போன திமுக

காங்கிரசுக்கு திமுக எத்தனை சீட் ஒதுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் மாலன் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இக்கடிதம் துக்ளக் இதழில் வெளிவந்துள்ளது.

இந்த கடிதம் திமுகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. கிண்டல் செய்யும் தொணியில் அக்கடிதம் உள்ளததால்தான் இந்த கொந்தளிப்பு என்கிறார்கள். ஆகவே, அக்கடிதத்தை எழுதிய மாலனுக்கு கடுமையான அர்ச்சனை செய்து வருகிறார்கள் திமுகவினர்.

அவர் எதற்காக விளக்கு பிடிக்கிறார்? ஆத்திரத்தின் உச்சிக்கே போன திமுக

இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியிலும் மாலனை கடுமையாக விமர்த்து கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.

திமுகவும் காங்கிரசும் செய்துகொள்ளும் இடப்பங்கீடானது இரு கட்சி தலைமைக்கும் மட்டுமே உரியமையுடையது. இதில், மாலன் எதற்காக விளக்கு பிடிக்கிறார்?என்று கடுமை காட்டும் முரசொலி,

கொள்கை, பதவி பற்றி திமுகவுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம். துண்டு, வேட்டி கதைகளை எங்களுக்கே விட வேண்டாம் என்று கூறியிருப்பதோடு,

திமுக தலைவரின் ஜாதகம் என்ன என்று ஜோசியம் பார்க்கிறீர்களே..மாலன் ராசிக்கு என்ன நடக்கும் என்று தெரியாதா என்று கேட்டு, ‘’இந்தியா டுடே பத்திரிகையில் இவரது வேலைக்கு பரிந்துரைத்த இரண்டு தலைவர்கள்( ராஜீவ்காந்தி, ராஜேஷ் பைலட்) மரணமும் மிகத்துயரமானது. மாலனின் ராசிதான் இதற்கு காரணமா?’’ என்ற அதிர்ச்சி கேள்வியை எழுப்பி இருக்கிறது.

அவர் எதற்காக விளக்கு பிடிக்கிறார்? ஆத்திரத்தின் உச்சிக்கே போன திமுக

கருப்பையா மூப்பனாரிடம் சிவசங்கரி சொல்லி, ராஜேஷ் பைலட்டிடம் கருப்பையா மூப்பனார் சொல்லி, ராஜீவ்காந்தியிடம் ராஜேஷ் பைலட் சொல்ல, பிரபுசாவ்லாவிடம் ராஜீவ்காந்தி சொல்ல, அருண்பூரியிடம் பிரபுசாவ்லா சொல்ல.. இத்தனை காங்கிரஸ் தலைவர்களும் இல்லை என்றால் சட்டையை கிழித்துக்கொண்டுதான் நிற்பார் இந்த நரகல் நாராயணன். அத்தனை காங்கிரஸ் தலைவர்களின் தயவில்தான் இந்தியா டுடே பத்திரிகையில் பணிக்கு சேர்ந்தார் என்றும், மாலன் இப்போது பாஜவுக்கு விலை போய்விட்டார் என்றும் என்று கடுமையாக சாடியிருக்கிறது.