மகளை காணாமல் தவித்த தாய்.. மிரட்டிய போலீசார்!

 

மகளை காணாமல் தவித்த தாய்.. மிரட்டிய போலீசார்!

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில், தனது 16 வயது மகளை காணவில்லை என்று வனிதா கடந்த வாரம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்த புகாரின் மேல் நடவடிக்கை ஏதும் உண்டா? தன் மகளைபற்றிய தகவல் ஏதும் கிடைத்ததா என்று வனிதா தினமும் போலீஸ் ஸ்டேசனுக்கு அலைந்துகொண்டிருக்கிறார். ஆனால், போலீசாரிடம் இருந்து எந்த பொறுப்பான பதிலும் இல்லை.

மகளை காணாமல் தவித்த தாய்.. மிரட்டிய போலீசார்!

மகளை காணாமல் தவித்து நிற்கும் வனிதா, பொறுமையிழந்து போலீசாரிடம் ஆத்திரமாக கேட்கவும், அவரை கண்டபடி திட்டி, மிரட்டியும் அனுப்பி இருக்கிறார்கள்.

இதனால் அவர் இந்திய தேசிய மாதர் சங்கத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் புகார் கூறியிருக்கிறார். அப்புகாரின் பேரில் சிபிஐ மற்றும் இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தை இன்று முற்றுகையிட்டனர்.

வனிதாவின் உறவினர்களும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், காணமல் போன சிறுமி குறித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.