கணவரை விடுவிக்கக்கோரி தீக்குளிக்க முயற்சித்த மனைவியும் கைதானார்

 

கணவரை விடுவிக்கக்கோரி தீக்குளிக்க முயற்சித்த மனைவியும் கைதானார்

கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கணவரை விடுவிக்கக்கோரி தீக்குளிக்க முயற்சி செய்த மனைவியையும் கைது செய்தது போலீஸ்.

போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை பிடிக்க தஞ்சை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கூடலூரில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கணவரை விடுவிக்கக்கோரி தீக்குளிக்க முயற்சித்த மனைவியும் கைதானார்

போலீஸ் விசாரணையில் அவர் கூடலூரை சேர்ந்த ஜெயக்குமார்(36) என்பது தெரியவந்துள்ளது. ஜெயக்குமாரிடம் மேற்கொண்டு போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு, ஜெயக்குமாரின் மனைவி வெண்ணிலா(34) தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்து, தன் கணவரை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொல்லிக்கொண்டே, முன்கூட்டியே எடுத் டுவந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதைக்கண்டு பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்த போலீசார், வெண்ணிலாவை கைது செய்து, பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.