மகளின் உடலை கடித்து திண்ணும் நாய்: கதறியழும் தந்தையின் அவலம்

 

மகளின் உடலை  கடித்து திண்ணும் நாய்: கதறியழும் தந்தையின் அவலம்

அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தினால் உயிரிழந்த மாணவியின் உடலை தெருநாய் தின்றதை கண்டு தந்தை கதறியழும் அவலம் நேர்ந்திருக்கிறது.

உத்தரபிரேத மாநிலத்தில் சரண்சிங்கின் 13வயது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சாலை விபத்தில் படுகாயமடைந்த தன் மகளை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் சரண் சிங்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள் மருத்துவமனை அலுவலர்கள்.

மகளின் உடலை  கடித்து திண்ணும் நாய்: கதறியழும் தந்தையின் அவலம்

ஆனால், தன் மகளை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று சரண் சிங் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சில வழிமுறைகளை சொல்லி அதை செய்துவிட்டு உடலை எடுத்துச்செல்லும்படி சொல்லியிருக்கிறார்கள்.

அதனால் ஸ்டெச்சரில் இருந்த மகளின் உடலை அப்படியே ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, மருத்துவர்களிடம் கையொப்பம் வாங்க சென்றிருக்கிறார்.

இதற்கிடையில் கேட்பாரற்று கிடந்த அந்த மாணவியின் உடலை மருத்துவமனை வளாகத்தில் இருந்த நாய் ஒன்று கடித்து திண்ண முயற்சித்துக்கொண்டிருந்தது. ஸ்டெச்சரில் தாவி நின்றுகொண்டு தன் மகளின் உடலை நாய் கடித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் கதறிய சரண் சிங், அங்கே இங்கே அலையவிடும் மருத்துவமனை நிர்வாகம், ஒரு சடலத்தை கொஞ்ச நேரம் கூட பாதுகாக்கும் பொறுப்பு இல்லாமல் இருக்கிறதே என்பதை உலகுக்கு எடுத்துக்காட்ட, தன் வேதனையையும் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்த சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூல வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ வைரலாகி பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.