பெரியார் பேரனுக்கு கொலைமிரட்டல்; இந்து பாரத் சேனா பிரமுகர் கைது

 

பெரியார் பேரனுக்கு கொலைமிரட்டல்; இந்து பாரத் சேனா பிரமுகர் கைது

இந்து பாரத் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் மனோகரன். கோவை கள்ளப்பாளையத்தை சேர்ந்த இவர் தனது வாட்ஸ் அப் குழுவில் பெரியாருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார்.

பெரியார் பேரனுக்கு கொலைமிரட்டல்; இந்து பாரத் சேனா பிரமுகர் கைது

இந்நிலையில், ‘’பெரியார் சி்லையை உடப்பேன்’’என்று அவர் போட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் கொண்ட கள்ளப்பாளையத்தை சேர்ந்த பிரபு, மனோகரனிடம் இதை தட்டிக்கேட்டுள்ளார். அதைக்கேட்க நீ யார் என்று மனோகரன் கேட்க, ‘’நான் பெரியார் பேரண்டா’’என்று சொல்லி இருக்கிறார் பிரபு. அப்போது இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில், கொலை செய்துவிடுவேன் என்று பிரபுவை மிரட்டியுள்ளார் மனோகரன்.

இதனால் கோவை செட்டிபாளையம் போலீசாரிடம் பிரபு புகார் தெரிவிக்கவே, அவர்கள் மனோகரனை அழைத்து விசாரிக்கையில், பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொன்னதும், பெரியார் குறித்து தொடர்ந்து செய்தி பரப்பி வந்ததும், தட்டிக்கேட்ட பிரபுவை மிரட்டியதும் உண்மை என்று தெரியவந்ததால், மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.