நீங்க வேணும்னா தூக்கி நிறுத்திப்பாருங்க…அப்போ தெரியும்.. சவால் விட்ட முதல்வர்!

 

நீங்க வேணும்னா தூக்கி நிறுத்திப்பாருங்க…அப்போ தெரியும்.. சவால் விட்ட முதல்வர்!

’’சுவிட்ச் போட்ட உடனே எல்லாம் சரியாகிடுமா? ரிமோட் பட்டனை அழுத்தின உடனே சரியாகிடுமா என்ன? மின்சாரம் ரொம்ப ஆபத்தானது. ஒவ்வொரு உயிரும் ரொம்ப முக்கியமானது. ஒவ்வொன்றாகத்தான் பார்க்க முடியும். நீங்கள் வேண்டுமானால் ஒரு கம்பத்தை தூக்கி நிறுத்து பாருங்கள்…அப்போது தெரியும்.. எவ்வளவு நேரம் ஆகும்னு. உழைச்சாதான் அந்த உழைப்போட அருமை தெரியும்.

மின்கம்பத்தை தூக்கி நிறுத்தி வச்சிட்டாலும் அதுல வயரை மாட்டிவிட்டா சரியாகிவிடுமா என்ன? கம்பங்களின் மேலே மரம், கிளைகள் விழுண்டு கிடக்குது. சரியாக அப்புறப்படுத்தாவிட்டால் எர்த் அடிக்கும். அதையெல்லாம் பார்த்துதான் சரி செய்ய முடியும்.

நீங்க வேணும்னா தூக்கி நிறுத்திப்பாருங்க…அப்போ தெரியும்.. சவால் விட்ட முதல்வர்!

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாம உழைக்கிறாங்க. அதுக்காக அவுங்களுக்கு வாழ்த்து சொல்லுங்க. அவுங்க உழைப்பை குறைத்து பேச வேண்டாம்.’’என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தின் ரெட்டிச்சாவடி, குமாரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் ஆய்வு செய்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியாக எடுத்ததால் புயலால் பெரிய பாதிப்பு இல்லை’’என்றவர்,

’’புயல், மழை வெள்ளத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. உயிரிழப்பை தவிர்க்கவே மழைநீர் முழுவதும் அகற்றப்பட்ட பிறகே மின் விநியோகம் தொடங்கப்படும்’’என்று சொல்லிவிட்டு,

’’கடலூர் மாவட்டத்தில் புயலால் விழுந்த 321 மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும் என வானிலை மையம் கூறியிருந்தது. அதனால் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தோம்’’என்று சொன்னபோது, ஆயிரம் மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டும் காலையில் இருந்து பணி நடந்து பணிகள் இன்னும் முடியவில்லையே. இயல்பு நிலை திரும்பவில்லையே என்ற கேள்விக்குத்தான் மேற்கண்ட பதிலைச்சொன்னார் முதல்வர்.