போலீசை கால் ஷுவை நக்க வைப்போம் – பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

 

போலீசை கால் ஷுவை நக்க வைப்போம் – பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று அவரையும் அவரது திரிணாமுல் கட்சியையும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், துர்காபூரில் நேற்றைய தினம் இது தொடர்பாக நடந்த பாஜக கூட்டத்தில் மேற்கு வங்க பாஜக தலைவர் ராஜூ பான்ர்ஜி பங்கேற்று பேசினார்.

போலீசை கால் ஷுவை நக்க வைப்போம் – பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு

முன்னதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா பேசியபோது, ‘’மம்தா பானர்ஜி ஒரு பெண் என்றாலும் அவர் ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது’’ என்றார்.

ராஜூ பான்ர்ஜி அவர் பேசியபோது, ‘’மேற்குவங்கத்தில் குண்டர்களின் ராஜ்ஜியம் அதிகமாகவிட்டது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமலகி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போலீசை கால் ஷூவை நக்க வைப்போம்.’’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினர்.