ஒரு பெண்ணுடன் வாழ இன்னொரு பெண்ணுடன் ஒத்திகை: சென்னையில் கதறும் மும்பை இளம்பெண்

 

ஒரு பெண்ணுடன் வாழ இன்னொரு பெண்ணுடன் ஒத்திகை: சென்னையில் கதறும் மும்பை இளம்பெண்

ஒரு பெண்ணை திருமணம் நிச்சயதார்த்தம் செய்தபிறகு இன்னொரு பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்து திருமணம் நேரத்தில் அந்த பெண்ணை கழட்டிவிட்டதால் சென்னையில் கதறுகிறார் மும்பை இளம்பெண்.

மும்பையை சேர்ந்த பூஜா(வயது28) கடந்த 2016ம் ஆண்டில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது தோழியின் நண்பரான சாப்ட்வேர் என்ஜினியர் திணேஷ்(38) அறிமுகம் கிடைத்ததால் அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார் பூஜா.

ஒரு பெண்ணுடன் வாழ இன்னொரு பெண்ணுடன் ஒத்திகை: சென்னையில் கதறும் மும்பை இளம்பெண்

பீச், பார்க், சினிமா தியேட்டர் தினேஷுடன் சுற்றும் அளவுக்கு நட்பு வைத்துள்ளார் பூஜா. கல்லூரி படிப்பு முடிந்து பூஜா மும்பைக்கு புறப்பட்டபோது, உன்னை என்னால் பிரியமுடியவில்லை. எனக்கே தெரியாமல் உன்னை காதலித்து வந்திருக்கிறேன். அது இப்போதுதான் தெரிகிறது என்று திணேஷ் உருகியிருக்கிறார். பூஜாவுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லாததால் ஊருக்கு போய் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

தொடர்ந்து செல்போனில் பேசிய திணேஷ், நீ இல்லாவிட்டால் செத்துவிடுவேன் என்று சொன்னதும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிளைட் பிடித்து சென்னை வந்திருக்கிறார் பூஜா.

ஒரு பெண்ணுடன் வாழ இன்னொரு பெண்ணுடன் ஒத்திகை: சென்னையில் கதறும் மும்பை இளம்பெண்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருவரும் தனி வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதாக திணேஷ் வாக்கு கொடுத்ததால் அதை நம்பி வாழ்ந்ததாக இப்போது கதறுகிறார் பூஜா.

ஒரே வீட்டில் இருவரும் நெருங்கி வாழ்ந்த வந்ததால் ஒருமுறை கருவுற்றபோதும் பூஜாவே முன்வந்து கலைத்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், தனது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டு போன தினேஷ் திரும்பி வரவே இல்லை. செல்போனிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

கடந்த ஏப்ரல் 8ம்தேதி அன்று உறவினரின் முகநூல் பக்கத்தில்,வேறொரு பெண்ணுடன் திணேஷ் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். விசாரித்து பார்த்தால், போன வருடமே அப்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது தெரியவந்துள்ளது.

வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் பண்ணிவிட்டு, திருமணத்திற்கு இடையில் இருக்கும் சில மாதங்களுக்காக மட்டும் தன்னை ஏமாற்றி தன்னுடன் வாழ்ந்து வந்தது தெரிந்ததும் கதறிய பூஜா, தேசிய பெண்கள் ஆணையம், அடையாறு காவல் துணை ஆணையர், அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையம் ஆகியவற்றில் புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊடகங்கள் வாயிலாகவாவது அந்த மோசடி மன்னனை உலகுக்கு அடையாளம் காட்ட முன்வந்திருக்கிறார் பூஜா.