கசந்துபோன காதல் மனைவி..தலையணையால் கொன்றுவிட்டு பாம்பு கடித்ததாக நாடகம்

 

கசந்துபோன காதல் மனைவி..தலையணையால் கொன்றுவிட்டு பாம்பு கடித்ததாக நாடகம்

பழவேற்காடு அருகே உள்ள காட்டாவூரைச் சேர்ந்த பிரவின்குமார், தோனிரேவு கிராமத்தை சேர்ந்த சிவரஞ்சனியை (வயது 23) காதலித்து கரம் பிடித்தார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் திருபாலைவனத்தில் வசித்து வந்தனர். கடந்த 2018ல் திருமணம் ஆன இவர்களுக்கு குழந்தை இல்லை. இதுவே தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், பிரவின்குமாருக்கு சரியாக வேலை இல்லாததால், சிவரஞ்சனி வீட்டில் போய் பணம், நகைகள் வாங்கிவரச்சொல்லி பிரச்சனை செய்து வந்திருக்கிறார். காதலித்து கல்யாணம் செய்தபோது எதுவும் கேட்காமல், இப்போது திடீரென்று வரதட்சனையை எதிர்பார்ப்பதால் அதிர்ந்து போன சிவரஞ்சனி, இதுபற்றி வீட்டில் கேட்கமுடியாது என்று கூறியிருக்கிறார். ஆனாலும், விடாப்பிடியாக கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார் பிரவீன்குமார்.

கசந்துபோன காதல் மனைவி..தலையணையால் கொன்றுவிட்டு பாம்பு கடித்ததாக நாடகம்

இந்த விவகாரம் சிவரஞ்சனி வீட்டாருக்கு தெரிந்து அவர்கள் குடும்பத்தினருடன் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள். அதன்பிறகும் இருவருக்குள்ளும் சண்டை ஓயவில்லை.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்றும் சண்டை வந்திருக்கிறது. இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் சிவரஞ்சனியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி இருக்கிறார் பிரவீன்குமார். இதில் சிவரஞ்சன் இறந்துபோனதும், பயந்துபோன பிரவீன்குமார், பாம்பு கடித்து இறந்துவிட்டதாக சிவரஞ்சனி வீட்டாருக்கு போன் செய்திருக்கிறார்.

சமாதானப்படுத்திவிட்ட வந்தபிறகு நல்லா வாழ்ந்துகொண்டிருப்பாள் என்று நினைத்த மகள் இறந்துவிட்டதாக செய்தி வந்ததும், பதறி அடித்து வந்த மகளின் சடலத்தை பார்த்து கதறி இருக்கிறார்கள்.

தொடர்ந்து சண்டை நடந்து வந்த நிலையில் சிவரஞ்சனி இறந்ததால், பிரவின்குமார் மீது சந்தேகப்பட்டு திருபாலைவனம் போலீசில் புகார் தந்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்களின் சந்தேகம் உண்மை என்று தெரியவந்தது.