இளம்பெண்கள் முன்னால் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து… கோயில் குருக்களின் அட்டூழியம்

 

இளம்பெண்கள் முன்னால் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து… கோயில் குருக்களின் அட்டூழியம்

சென்னை அடுத்த பழைய பல்லாவரம் பெருமாள் கோயிலிலில் குருக்களாக இருப்பவர் பாலாஜி(30). திருமணம் ஆகாத பாலாஜி, கோயிலுக்கு வரும் பெண்களிடம் தொட்டுத்தொட்டு பேசி வந்தது பெரும் சர்ச்சை ஆகி இருக்கிறது. ஆனால் அவர் தொடர்ந்து அதையே செய்து வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பூஜை நேரம் போக மற்ற நேரங்களில், பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடவே புல்லட்டில் வலம்வந்துள்ளார். நங்கநல்லூர் மற்றும் வோல்டாஸ் காலனி, எஸ்.பி.ஐ. காலனி என்று சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வந்து, சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களின் முன்பு, புல்லட்டை நிறுத்திவிட்டு, பேண்ட் ஜிப்பை அவிழ்த்து, அந்தரங்க உறுப்பை காட்டி வந்துள்ளார். பாலாஜியின் இந்த அதிரடியால் இளம்பெண்கள் தெறித்து ஓடியிருக்கிறார்கள்.

இளம்பெண்கள் முன்னால் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து… கோயில் குருக்களின் அட்டூழியம்

இதுமட்டுமல்லாமல் புல்லட்டில் போய்க்கொண்டிருக்கும்போதே, சாலையில் செல்லும் பெண்களின் மார்பகங்களை தொடுவது, பின்புறத்தை தட்டுவது என்பதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.

இது குறித்து பழவந்தாங்கல் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருந்ததால், சிசிடிவி காட்சிகளை வைத்தும், புல்லட் நம்பரை வைத்தும் உளவுத்துறை போலீசார் தேடி வந்ததில், பெருமாள் கோயில் குருக்கள் பாலாஜி சிக்கினார்.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாலாஜி தற்போது சிறைகம்பிகளை தட்டிக்கொண்டிருக்கிறார்.