என் கண் முன்னாலேயே சுடு..கணவரும் மாமனார்,மாமியாரும் துடித்துடித்து சாவதை பார்த்து சந்தோசப்படணும்.. அதிரவைக்கும் ஜெயமாலாவின் வாக்குமூலம்

 

என் கண் முன்னாலேயே சுடு..கணவரும் மாமனார்,மாமியாரும் துடித்துடித்து சாவதை பார்த்து சந்தோசப்படணும்.. அதிரவைக்கும் ஜெயமாலாவின் வாக்குமூலம்

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது என்றால், அக்கொலை வழக்கில் கைதாகி இருக்கும் ஜெயமாலாவின் வாக்குமூலம் அதிர வைக்கிறது.

தனது தம்பி மூலமாக கணவர்(ஷீத்தல்38), மாமானார்(தலில் சந்த்74), மாமியாரை(புஷபா பாய்70) சுட்டுக்கொன்றது ஏன் என்பது குறித்து போலீசாரிடம் அவர் தெரிவிக்கும்போது, ‘’ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி்யிடம் இருந்து சுட்டால் சத்தம் அதிகம் வெளியே தெரியாதபடி இருக்கும் கைத்துப்பாக்கி வாங்கினோம். அதை பலமுறை சுட்டு ஒத்திகை பார்த்துக்கொண்டோம். அந்த மூன்று பேரையும் சுடும்போது, என்னை வெளியே இருக்கச்சொன்னான் தம்பி. ஆனால், கணவரும், மாமானர் மாமியாரும் துடிதுடித்து சாவதை நான் பார்த்து சந்தோசப்படணும். என் கண்முன்னாலேயே சுடு.. என்று சொல்லிவிட்டு நான் நின்றுகொண்டேன்’’என்று அதிர வைத்துள்ளார் ஜெயமாலா.

என் கண் முன்னாலேயே சுடு..கணவரும் மாமனார்,மாமியாரும் துடித்துடித்து சாவதை பார்த்து சந்தோசப்படணும்.. அதிரவைக்கும் ஜெயமாலாவின் வாக்குமூலம்

இந்த அளவுக்கு அவர்கள் மீது வன்மன் ஏன்? என்ற கேள்விக்கு, ‘’முதலிரவிலேயே என் கணவர் மனநிலை சரியில்லாதவர் என்பதை புரிந்துகொண்டேன். அதனால் அப்போதே நான் ரொம்ப அப்செட் ஆயிட்டேன். நான் குளிக்கும்போதும், டிரஸ் மாத்தும்போது ஒளிந்து நின்று பார்ப்பாங்க. அதை கணவரிடம் சொன்னபோது, அவர் அதை பெரிசாக எடுத்துக்கொள்ளவில்லை.

என் கண் முன்னாலேயே சுடு..கணவரும் மாமனார்,மாமியாரும் துடித்துடித்து சாவதை பார்த்து சந்தோசப்படணும்.. அதிரவைக்கும் ஜெயமாலாவின் வாக்குமூலம்

அப்புறம் சொந்தக்காரங்க ரெண்டு பேர் எனக்கு வீட்டுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்தாங்க. மாமியாருக்கிட்ட இதைபத்தி சொன்னபோது, கூட்டுக்குடும்பத்துல அப்படி இப்படிதான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கன்னு சொல்லிட்டாங்க. 2 பிள்ளைகள் இருந்ததால் பொறுத்துப்போனேன். ஆனா, என் கணவர் கண்முன்னாடியே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது அவர் அதை பார்த்துக்கொண்டிருந்ததை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் தனியாக போகிறேன்..4 கோடி ஜீவனாம்சம் கொடுங்கன்னு கேட்டேன். 25 லட்சம்தான் தரமுடியும்னு சொல்லி அசிங்கமா திட்டினாங்க.அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன்’’என்று சொல்லி இருக்கிறார்.

சொத்துக்காக கொலை நடந்ததாக சொல்லப்பட்ட நிலையில், பாலியல் தொல்லையால் கொலை செய்தேன் என்று சொல்லி இருக்கிறார் ஜெயமாலா.