விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டமெடுக்கிற தொடை நடுக்க கும்பல்…திமுகவை கடுமையாக சாடும் அதிமுக

 

விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டமெடுக்கிற தொடை நடுக்க கும்பல்…திமுகவை கடுமையாக சாடும் அதிமுக

முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட திமுகவை, விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டமெடுக்கிற தொடை நடுக்க கும்பல் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறது அதிமுக.

விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டமெடுக்கிற தொடை நடுக்க கும்பல்…திமுகவை கடுமையாக சாடும் அதிமுக

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் திமுகவை 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் தோற்கடித்தது அதிமுக. அதுமட்டுமல்லாமல், 5 தொகுதிகளின் வெற்றியே அதிமுக ஆட்சிக்கு போதுமானது என்ற நிலையில் இரட்டிப்பாக 9 தொகுதிகளின் வெற்றியை பெற்றதும் எளிமை சாமானியர் எடப்பாடியாரின் நல்லாட்சிதான் என்றும், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை ஈட்டி ஆட்சியில் இருந்துகொண்டே 3வது முறையாக ஆட்சியை தொடர்கின்ற அதியசயத்தை நிகழ்த்த இருக்கின்றது அதிமுக என்றும் தெரிவித்திருக்கிறது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ’நமது அம்மா’வின் தலையங்கம்.

விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டமெடுக்கிற தொடை நடுக்க கும்பல்…திமுகவை கடுமையாக சாடும் அதிமுக

மேலும், அதிமுகவின் வெற்றியை தடுப்பதற்கு அவதூறுகளை மட்டுமே முன்வைத்து அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் தரப்போகும் தீர்ப்பு மூக்கறுப்புதான் என்றும், 2012ல் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப் போகிறவர் எடப்பாடியார் தான் என்பது திமுகவினருக்கே தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது. அதனால்தான் விசில் ஊதுவதற்கு முன்பே ஓட்டமெடுக்கிற தொடை நடுக்க கும்பலாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டது திமுக என்றும், பிரச்சாரம் என்ற பெயரில் அபச்சாரம் செய்யத்தொடங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ள அதிமுக,

காவேரி உரிமையை மீட்டது, மீத்தேனை துரத்தியது, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டது, அத்திக்கடவு அவிநாசி திட்டம் தந்தது என்று இன்னும் பட்டியலிட முடியாத சாதனைகளை சொல்லி தெம்போடு கொடி பிடித்து 200 தொகுதிகளுக்கும் மேலான வெற்றி்யை பெறும் அதிமுக. இதை துண்டு சீட்டு கோமாளிகளால் தடுக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.