கணவரின் சடலத்துடன் நான்கு நாள் வாழ்ந்த மனைவி! துர்நாற்றத்தை எலி செத்ததாக மறைத்தது அம்பலம்

 

கணவரின் சடலத்துடன் நான்கு நாள் வாழ்ந்த மனைவி! துர்நாற்றத்தை எலி செத்ததாக மறைத்தது அம்பலம்

செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரி்ய புத்தூரை சேர்ந்தவர் ஜோதிடர் தாமோதரன். மனைவி சாரதா மறைந்தபிறகு திருச்சியை சேர்ந்த ராஜேஸ்வரியை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

62 வயதான ஜோதிடருக்கு உதவியாளராக வந்த ராஜேஸ்வரி, பின்னர் வருக்கு மனைவியாகவே ஆகி, கடந்த ஆறு ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

சமீப காலமாக ராஜேஸ்வரி மனநிலை சரி இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் தேவையில்லாமல் தெரு மக்கள் யாராவது அவரது வீட்டுக்கு வந்தால் கண்டபடி திட்டுவதால் யாரும் அவர் வீட்டுக்கு செல்வதில்லை. தனக்கு தேவையானதை தானே சென்று வாங்கி வந்திருக்கிறார் ராஜேஸ்வரி. சில நேரங்களில் ஜோதிடரே சென்று வாங்கி வந்துள்ளார்

கணவரின் சடலத்துடன் நான்கு நாள் வாழ்ந்த மனைவி! துர்நாற்றத்தை எலி செத்ததாக மறைத்தது அம்பலம்

இந்நிலையில், கடந்த சில தினங்களாக தெருவில் இருக்கும் சிறுவர்களிடம் கடையில் டிபன் வாங்கிட்டு வரச்சொல்லி இருக்கிறார். ஜோதிடர் எங்கே என்று கேட்டதற்கு, அவருக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி வந்திருக்கிறார்.

அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அதுகுறித்து அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, எலி செத்து கிடக்குது போலிருக்குது என்று சொல்லி விட்டாராம். ஆனாலும் துர்நாற்றம் அதிகம் வரவே, சந்தேகப்பட்டு தெருவில் இருப்போர் ஒன்றுகூடி வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

யாரும் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று கட்டையால் அடித்திருக்கிறார். பொதுமக்களில் சிலர் அவரை பிடித்துக்கொள்ள, சிலர் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

வீட்டுக்குள் அழுகிய நிலையில் உடல் கிடந்திருக்கிறது. அருகே சென்று பார்த்தபோது அது ஜோதிடரின் உடல் என்று தெரிந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். உடலைச் சுற்றி புழுக்கள் இருந்திருக்கின்றன.

சம்பவம் அறிந்து கிராம நிர்வாக அதிகாரி, போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஜோதிடர் இறந்து நான்கு நாட்கள் ஆகி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இறந்தவரின் உடலோடு நான்கு நாட்கள் ராஜேஸ்வரி இருந்து பாசமா? என்ற கோணத்திலும், ஜோதிடரின் மரணம் இயற்கை மரணமா? இல்லை கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றார்கள்.

இறந்தவரின் உடலோடு நான்கு நாட்கள் மனைவி இருந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.