பிரசவத்துக்காக மனைவி தாய்வீட்டுக்கு போன இடைவெளியில் மூன்றாவது திருமணம் செய்த கணவன்

 

பிரசவத்துக்காக மனைவி தாய்வீட்டுக்கு போன இடைவெளியில் மூன்றாவது திருமணம் செய்த  கணவன்

திருப்பூர் மாவட்டத்தில் செல்லம் நகர் பகுதிய சேர்ந்த சின்ன மருதுபாண்டியனுக்கும், இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பிருந்தாவுக்கும் கடந்த2011 ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்து ஒரு மாதம் சென்ற பிறகு, மாமியார் மாரியம்மாள், என் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்தவன். அவனுக்கு நீங்க போட்ட பவுன் எல்லாம் பத்தாது. அதனால மேலும் 20 பவுன்நகையும் ஒரு லட்சம் பணமும் கேட்டு பிருந்தாவிடம் துன்புறுத்தி இருக்கிறார். கணவரிம் இதுகுறித்து சொல்லியபோது, அம்மா சொல்லுகிறபடி நடந்துகொள் என்றிருக்கிறார்.

பிரசவத்துக்காக மனைவி தாய்வீட்டுக்கு போன இடைவெளியில் மூன்றாவது திருமணம் செய்த  கணவன்

இதனால் அதிர்ச்சி அடைந்த பிருந்தா தனது பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார். பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. இந்த பிரச்சனை ஈப்படியே இருந்த சூழலில், தலைபிரசவத்திற்காக பிருந்தா தாய் வீட்டிற்குசென்றிருந்துள்ளார். இந்த நேரத்தில் சின்ன மருது பாண்டியனுக்கு அவசர அவசரமாக வேறு ஒரு பெண் பார்த்துபேசி திருமணமும் செய்துவைத்துவிட்டார் மாரியம்மாள்.

இந்த விவரம் தெரிந்து பிருந்தாவும், அவரது குடும்பத்தினரும் ஆவேசப்பட்ட நேரத்தில், சின்ன மருது பாண்டி மலேசியாவில் வேலை பார்த்தபோது அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

ஏற்கனவே நடந்த திருமணத்தையும் மறைத்து தன்னை கல்யாணம் செய்து, இப்போது மேலும் சட்டத்திற்கு புறம்பாக இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ள சின்ன மருதுபாண்டியன் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிருந்த புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து போலீசார் சின்ன மருது பாண்டியனிம் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.