தமிழக முஸ்லீம்கள் திருவாவளவன் பின்னால் செல்வது ஆபத்தானது… எச்சரிக்கும் வேலூர் இப்ராஹிம்

 

தமிழக முஸ்லீம்கள் திருவாவளவன் பின்னால் செல்வது ஆபத்தானது… எச்சரிக்கும் வேலூர் இப்ராஹிம்

சிதம்பரம் கோயிலுக்கு போய் பொட்டு வைத்துக்கொண்டு நாடகத்தி அரங்கேற்றுகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் என்றார் தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம்.

தமிழக முஸ்லீம்கள் திருவாவளவன் பின்னால் செல்வது ஆபத்தானது… எச்சரிக்கும் வேலூர் இப்ராஹிம்

இதுகுறித்து சேலம் கோரிமேடு பகுதியில் ஆவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இந்துமத வழிபாட்டுத் தலத்தில் இருக்கக்கூடிய சிலைகளை பற்றி ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் பேசி இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி வந்த திருமாவளவன், வேல்யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போதும் இந்துக்களின் உணர்வை புண்படுத்தி வருகிறார். ஆனால், இப்போது தேர்தல் காலம் நெருங்கி வந்துவிட்டதால் சிதம்பரம் கோயிலூக்கு போய் பொட்டு வைத்துக்கொண்டு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்’’ என்றார்.

தமிழக முஸ்லீம்கள் திருவாவளவன் பின்னால் செல்வது ஆபத்தானது… எச்சரிக்கும் வேலூர் இப்ராஹிம்

மேலும், ‘’தமிழக முஸ்லீம்கள் திருவாவளவன் பின்னால் செல்வது ஆபத்தானது. இதை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வரும் தேர்தலில் தீய சக்தி திருமாவளவனை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இஸ்லாம் மதத்தினரோடு திருமாவளவன் நெருக்கமாக இருந்து வரும்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பாபர் மசூதிக்கு ஆதரவாக நகரங்கும் திருமாவளன் கட்சியினர் போஸ்டர் அடித்து ஓட்டி வரும் நிலையில், தமிழக முஸ்லீம்கள் திருவாவளவன் பின்னால் செல்வது ஆபத்தானது என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் வேலூர் இப்ராஹிம்.