புதைக்கப்பட்ட க.காதலனின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாததால் பெண் தற்கொலை

 

புதைக்கப்பட்ட க.காதலனின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாததால் பெண் தற்கொலை

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்த முருகன், தனது மனைவி ஜெகஜோதி(வயது45) உடனான பிரச்சனையினால் பிரிந்து சென்றுவிட்டார். இரண்டு குழந்தைகளுடன் தனி்யாக வாழ்ந்து வந்த ஜெகஜோதிக்கு எதிர்வீட்டு இளைஞர் துரைக்கண்ணுவுடன்(வயது29) பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கணவன் – மனைவி போல் இருவரும் வாழும் அளவுக்கு போயிருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக் விபத்தில் சிக்கிய துரைக்கண்ணு, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதைக்கப்பட்ட க.காதலனின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாததால் பெண் தற்கொலை

பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸில் துரைக்கண்ணுவின் உடல் வந்ததும் உறவினர்களூம் ஊராரும் உடலை கண்ணம்பாளையம் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்துவிட்டு வந்தனர்.

முறைப்படி கணவன் – மனைவியாக வாழாததால் துரைக்கண்ணுவின் இறுதிச்சடங்கில் ஜெகஜோதியினால் பங்கேற்க முடியவில்லை.

கடைசியாக துரைக்கண்ணு முகத்தை பார்க்க ஆசைப்பட்டும் அது முடியாமல் போய்விட்டதால், அடக்கம் செய்யப்பட்ட மறுதினம் காலையில் கண்ணம்பாளையம் சுடுகாட்டுக்கு சென்று, துரைக்கண்ணுவை புதைத்த இடத்தில் மண்ணை தோண்டி இருக்கிறார்.

இதைப்பார்த்த அப்பகுதியினர் துரைக்கண்ணு வீட்டாருக்கு சொல்ல, அவர்கள் ஊராருடன் திரண்டு வந்து, ஜெகஜோதி மண்ணை தோண்டுவதை தடுத்துவிட்டனர்

முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் துரைக்கண்ணு – ஜெகஜோதி பழக்கம் ஊராருக்கு தெரிந்திருக்கிறது. முகத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லியும், புதைத்துவிட்ட பிறகு மறுபடியும் தோண்டக்கூடாது என்று ஊரார் உறுதியாக சொல்லி, ஜெகஜோதியை ஊருக்குள் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த ஜெகஜோதி, மதுவில் சாணி பவுடர் கலந்து குடித்திருக்கிறார். அதில் சீக்கிரத்தில் உயிர் பிரியாததால், வேப்ப மரத்தில் தூக்கிட்டு தொங்கி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

க.காதலன் முகத்தை பார்க்க முடியவில்ல என்பதற்காக தற்கொலை செய்துகொண்டாரா? துரைக்கண்ணு இறந்துவிட்டதால், தானும் இறந்துவிட எண்ணியபிறகுதான் கடைசியாக துரைக்கண்ணு முகத்தை பார்க்க சென்றாரா? என்று ஊரார் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில், இரு குழந்தைகளை பற்றி அந்த அப்பனுக்குதான் அக்கறை இல்லை. அம்மாவும் இப்படி அக்கறை இல்லாமல் தற்கொலை செய்துகொண்டது பற்றி கவலை தெரிவிக்கின்றனர் ஊரார்.