குருதியை கொடையாகத் தர உரிமையோடு அழைக்கின்றேன்… சீமான்

 

குருதியை கொடையாகத் தர உரிமையோடு அழைக்கின்றேன்… சீமான்

தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளான நவம்பர் 26 அன்று, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் அந்நாளை சிறப்பாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி சார்பாகச் சிறப்பான முன்னெடுப்புகளை எப்போதும் போலத் தொடங்கியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

குருதியை கொடையாகத் தர உரிமையோடு அழைக்கின்றேன்… சீமான்

அவர் மேலும், ‘’ஒவ்வொரு ஆண்டும் தலைவர் பிறந்த நாளினை தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி, இன விடுதலைக்குச் சூளுரைக்க உறுதியேற்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறை மற்றும் குருதிக்கொடைப் பாசறை இணைந்து, தமிழகமெங்கும் முன்னெடுத்துவரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வுகளில் இவ்வாண்டும் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் பெருந்திரளாக உணர்வெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்’’என்று வேண்டுகோள் விடுத்துள்ள சீமான்,

’’தொற்றுநோய் பேரிடர் காலமான இக்காலத்தில் பெரும் புகழ் கொண்ட நம் தலைவரின் பிறந்தநாளில் நாம் வழங்கும் குருதி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலேயே அதிகக் குருதிக்கொடை தருகிற அரசியல் அமைப்பாக நாம் தமிழர் கட்சி தான் திகழ்கிறது எனக் குருதிக்கொடை பெறுகிற தொண்டார்வ நிறுவனங்கள் புள்ளி விபரங்களோடு தெரிவிக்கின்றன.

அந்த வகையில் தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக, குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் மாசற்ற தலைவனின் பிறந்த நாளில், மக்கள் உயிர் காக்க நம் குருதியைக் கொடையாகத் தந்து நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டிட வேண்டும் என உரிமையோடு அழைக்கின்றேன்’’என்று தெரிவித்திருக்கிறார்.