சாப்பாடு போட்டு அரசியல் பண்ணக்கூடிய இயக்கம் அதிமுகதான்… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

 

சாப்பாடு போட்டு அரசியல் பண்ணக்கூடிய இயக்கம் அதிமுகதான்… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர் என்று ஒரேநாளில் ஏழு தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது அதிமுக.

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிவகாசி கூட்டத்தில் பேசியபோது, ‘’அதிமுக இந்த மாவட்டத்துல எங்க மீட்டிங் நடத்தினாலும் கிடாவெட்டுதான் மட்டன் சாப்பாடுதான். அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு அரசியல் பண்ணக்கூடிய இயக்கம் அதிமுகதான். ஏழு தொகுதிகளிலும் (ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி) சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணிட்டோம்.

சாப்பாடு போட்டு அரசியல் பண்ணக்கூடிய இயக்கம் அதிமுகதான்… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அவர் மேலும், ‘’திமுகவினர் வடநாட்டுக்காரனை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களா வந்து ஓட்டு போடுவார்கள்.’’என்று கேட்டவர்,

’’இப்ப தேர்தல் ஒண்ணும் இல்ல. அதனால நான் ஓபனா பேசுறேன். தேர்தல் ஆரம்பிச்சுட்டாதான் கொடுக்குறது வாங்குறது எல்லாம் தெரியக்கூடாது. அப்படியும் ரகசிய கூட்டம் நடத்தி எப்படி ஜெயிக்கிறதுன்னு ஆலோசனை எல்லாம் பண்ணுவோம்’’என்று தெரிவித்திருக்கிறார்.