திமுகவை ஏமாற்றுகிறாரா பிரசாந்த் கிஷோர்? மாரிதாஸ் வைத்திருக்கும் ஆதாரம்!

 

திமுகவை ஏமாற்றுகிறாரா பிரசாந்த் கிஷோர்?  மாரிதாஸ் வைத்திருக்கும் ஆதாரம்!

கட்சி வளர்ச்சிக்காகவும், தேர்தல் பணிக்காகவும் ஐபேக் நிறுவனத்தை நியமித்து, அந்நிறுவனம் சொல்லும் ஆலோசனைகளிபடிதான் நடந்து வருகிறது திமுக. திமுகவின் அறிக்கைகள் தொடங்கி, பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் எல்லாமே ஐபேக் சொன்னபடிதான் செய்து வருகிறார்கள்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவுக்கு வலு சேர்க்கும் விதமாக, “எல்லோரும் நம்முடன்” திட்டத்தினை திமுகவை தொடங்க வைத்திருக்கிறது ஐபேக். தேர்தல் நெருக்கத்தில் போய் உறுப்பினர்கள் சேர்க்கையா? என்று எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது திமுகவினரே விமர்சித்து வந்தனர்.

திமுகவை ஏமாற்றுகிறாரா பிரசாந்த் கிஷோர்?  மாரிதாஸ் வைத்திருக்கும் ஆதாரம்!

இது ஒருபுறமிருக்க, இந்த திட்டத்தின் மூலமாக 20,00,000 உறுப்பினர் சேர்க்கை திமுக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அது உண்மை இல்லை என்கிறார் மாரிதாஸ்.

மேலும், மக்களையும், திமுக நிர்வாகிகளையும் ஏமாற்றுகிறாரா ஸ்டாலின்? அல்லது பிரசாந்த் கிஷோர் திமுகவை ஏமாற்றுகிறாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கும் மாரிதாஸ், இன்று(19.11.2020) மாலை 7.30மணிக்கு இது தொடர்பான வீடியோ வெளியிடப்படும் என்று சொல்லி அதிரவைத்திருக்கிறார்.

திமுகவை ஏமாற்றுகிறாரா பிரசாந்த் கிஷோர்?  மாரிதாஸ் வைத்திருக்கும் ஆதாரம்!

மக்களே பார்த்துக் கொள்ளுங்கள்.. தமிழ் தமிழ் பேசி ஊரை ஏமாற்றும் திமுக கட்சிக்கு பீகாரில் இருந்து தான் 80% டிவிட் போட்டு பொய்யான பிம்பத்தை பிரசாந்த் கிஷோர் மூலம் உருவாக்குகிறார்கள் என்பதற்கு ஆதாரம் என்று, டுவிட்டரில் திமுகவின் அதிக டுவிட்கள் எப்படி டிரெண்டாகின்றன என்பதை முன்பு ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய மாரிதாஸ், இன்று திமுக உறுப்பினர் சேர்க்கையின் மோசடிகளை அம்பலப்படுத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.