இறுகும் விசாரணையின் பிடி! சிக்கலில் தலைவி சினிமா!

 

இறுகும் விசாரணையின் பிடி! சிக்கலில் தலைவி சினிமா!

நடிகை கங்கனா ரணாவத் மீதான போலீஸ் விசாரணையின் பிடி இறுகுவதால் அவர் நடித்து வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று சினிமாவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை எழுந்து மகாராஷ்டிராவை அதிரவைத்த சமயத்தில் கங்கனா ரணாவத்தும் அவரது சகோதரியும் ரங்கோலி சந்தலும் தெரிவித்த கருத்துக்கள் சுஷாந்த் சிங் மரண அதிர்வலைகளை அதிகப்படுத்தியது.

இறுகும் விசாரணையின் பிடி! சிக்கலில் தலைவி சினிமா!

சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய புகார்களூக்கு எதற்கும் ஆதாரம் இல்லாததால் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆதாரமில்லாத குற்றங்களை சுமத்திய நீதிமன்றத்தின் நேரத்தினை வீணடித்ததோடு அல்லாமல், நாட்டில் ஒரு அசாதாரண சூழலையும் ஏற்படுத்தி பதற்றத்தை உண்டாக்கியதால் நீதிமன்றமே தாமாக முன்வந்து பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இப்படி பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது வேறு யாரேனும் வழக்கு தொடர்ந்தாலும் அந்த வழக்கின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது நீதிமன்றம்.

கங்கனா ரணாவத்தும் அப்படி ஒரு சிக்கலில் சிக்கியிருக்கிறார். அவருக்கு எதிராக சினிமா பிரமுகர் முனாவர் அலி, மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஸிஸ்திரேட் கோர்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், கங்கனா ரணாவத் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்குமாறு பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதையத்து கங்கனா ரணாவத் வரும் 23ம் தேதியும், அவரது சகோதரி 24ம் தேதியும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது பாந்திரா போலீஸ்.

மூன்றாவது முறையாக இந்த சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதால் இந்த முறை ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

போலீஸ் விசாரணையினால் தலைவி படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது தலைவி. இந்நிலையில் கங்கனா விசாராணைக்காக செல்வதால் ஒருவாரத்துக்கான ஷூட்டிங் ஷெட்யூல் முழுவதும் கேன்சல் செய்யப்பட வேண்டியம் சூழல் ஏற்பட்டுவிட்டது.