சென்னை வடக்கு மாவட்டத்தை 4ஆக பிரித்த திமுக!

 

சென்னை வடக்கு மாவட்டத்தை 4ஆக பிரித்த திமுக!

கழக நிர்வாகிகளின் வசதிக்காக திமுகவில் சென்னை வடக்கு மாவட்டம் நாலாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு என்றும், சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு என்றும் பிரிக்கப்பட்டு நான்கு பகுதிகளுக்கும் புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை வடக்கு மாவட்டத்தை 4ஆக பிரித்த திமுக!

சென்னை வடகிழக்கு மாவட்டத்தில் மாதவரம், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளும், சென்னை வடக்கு மாவட்டத்தில் பெரம்பூர், ராயபுரம், ராதாகிருஷ்ணன் நகர் பகுதிகளும் வருகின்றன.

சென்னை மேற்கு மாவட்டத்தில் ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி அகிய பகுதிகளும், சென்னை தென்மேற்கு மாவட்டத்தில் தி.நகர், மயிலாப்பூர் பகுதிகள் வருகின்றன.

சென்னை வடகிழக்கு மாவட்டத்திற்கு எஸ்.சுதர்சனமும், சென்னை வடக்கு மாவட்டத்திற்கு தா.இளைய அருணாவும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை மேற்கு மாவட்டத்திற்கு நே.சிற்றரசுவும், சென்னை தென்மேற்கு மாவட்டத்திற்கு மயிலை த.வேலுவும் பொறுப்பாளர்களாக நியமிக்கபட்டிருக்கிறார்கள்.