ரெண்டு பேரும் சேர்ந்திருக்கும் போட்டோக்களை காட்டிவிடுவேன்.. மிரட்டிய காதலன்! இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!

 

ரெண்டு பேரும் சேர்ந்திருக்கும்  போட்டோக்களை காட்டிவிடுவேன்.. மிரட்டிய காதலன்! இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!

நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் விக்னேஷ்(29) – ராம்பிரியா(20) இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த பழக்கம் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் விக்ணேஷ் வீட்டுக்கு தெரிஞ்சதும் அவர்கள் காதலுக்கு சம்மதிக்க மறுத்துவிட்டார்கள்.

எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் கேட்காததால், தனக்கு வேறோரு மாப்பிள்ளையை பார்க்கச்சொல்லி கேட்டிருக்கிறார். தந்தையும் ராம்பிரியாவுக்கு வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டகம் ஊரைச்சேர்ந்த ஒருவரை பார்த்து பேசி முடித்திருக்கிறார். திருமணம் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. வரும் 25ம் தேதி திருமணம் என்று தேதியும் குறித்துவிட்டார்கள்

ரெண்டு பேரும் சேர்ந்திருக்கும்  போட்டோக்களை காட்டிவிடுவேன்.. மிரட்டிய காதலன்! இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ராம்பிரியா வீட்டுக்கு வந்த விக்னேஷ், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரெண்டுபேரும் சேர்ந்திருக்கும் போட்டோக்களை உன் வருங்கால புருசன் கிட்ட காட்டிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

விக்னேஷ் இப்படி சொன்னபிறகு ராம்பிரியாவும் அவரையே திருமணம் செய்துகொள்ள சம்மதித்திருக்கிறார். ஆனால் விக்னேஷ் குடும்பத்தினர் பழையபடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீட்டையும் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதனால் வேறு வழியின்றி திருத்துறைப்பூண்டி மகளி ர் போலீசில் ராம்பிரியா புகார் கொடுத்திருக்கிறார். போலீசார் பேசியபோது செல்போனை எடுத்து பேசிய விக்னேஷ், போலீஸ் நிலையம் வந்துள்ளார். போலீஸ் ஸ்டேசன் அருகே இருந்த கோயிலில் போலீசாரே முன் நின்று விக்னேஸ் – ராம்பிரியா திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.