அமித்ஷா ஒண்ணும் அதுக்காக வரல… போட்டு உடைத்த ஜெயக்குமார்

 

அமித்ஷா ஒண்ணும் அதுக்காக வரல… போட்டு உடைத்த ஜெயக்குமார்

அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகத்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ம்தேதி தமிழகம் வருகிறார் என்ற பாஜக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.


திருவள்ளூரில் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கவும், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், கோவை -அவிநாசி இடையேயான விரைவு நெடுஞ்சாலையை திறந்து வைக்கவும் அவர் வருவதாகவும், சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து காணொளி காட்சி மூலமாகத்தான் இந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தமிழக பாஜக தரப்பில் சொல்லப்படும் வரும் நிலையில், ’’அரசு நிகழ்ச்சிகளில் அமித்ஷா பங்கேற்கவில்லை. அப்படி அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக எந்த நிகழ்ச்சி நிரலும் இதுவரை வரவில்லை’’என்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

அமித்ஷா ஒண்ணும் அதுக்காக வரல… போட்டு உடைத்த ஜெயக்குமார்

சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம், ‘’அமித்ஷா எதற்காக தமிழகம் வருகிறார்?’’ என்ற கேள்விக்கு, ’’தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேசிய தலைவர்கள் தங்களது கட்சியை வளர்ப்பதற்காக மாநிலங்களுக்கு வருவதுண்டு. அப்படித்தான் அமித்ஷா வருகிறார். அவர் வரட்டும். யார் வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வரலாம். அவர் வருகைக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’’ என்றவரிடம்,

அமித்ஷாவின் வருகையினால் அதிமுகவுக்கு பயம் ஏற்பட்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு, ‘’இது நீங்கள் எதிர்கட்சியை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி’’ என்றார்.

அதிமுகவுடன் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து அக்கட்சியுடனான கூட்டனியை இறுதி செய்வார் அமித்ஷா என்ற பேச்சு இருக்கும் சூழலில், அமைச்சரின் இந்த பிடி கொடுக்காத பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.