பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் செல்லக்கூடாது..பட்டியலின வார்டு உறுப்பினரை மிரட்டும் திமுக நிர்வாகி

 

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் செல்லக்கூடாது..பட்டியலின வார்டு உறுப்பினரை மிரட்டும் திமுக நிர்வாகி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கொழுமங்குழி பஞ்சாயத்து. இதில் பஞ்சாயத்து தலைவராக பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரியா என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறார். ஆனால், பஞ்சாயத்து அலுவலதின் உள்ளே பிரியா போகக்கூடாது என்று முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், திமுக நிர்வாகியுமான கார்த்தியேகன் மிரட்டி வந்திருக்கிறார். பிரியாவை தரக்குறைவாக பேசியும் வந்திருக்கிறார்.

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் செல்லக்கூடாது..பட்டியலின வார்டு உறுப்பினரை மிரட்டும் திமுக நிர்வாகி


இந்த நிலையில், கொழுமங்குழி 1வதுவார்டு உறுப்பினர் செல்வனும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இவரையும் தரக்குறைவாக திட்டி அலுவலககத்தினுள் செல்லக்கூடாது என்று மிரட்டி வருகிறார் கார்த்திகேயன். செல்வனை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கார்த்திகேயனின் மிரட்டலாலும், தலையீட்டினாலும் வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கே வந்திருக்கிறார் செல்வன்.