”சுடலை ராஜா..’’ ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை

 

”சுடலை ராஜா..’’ ஸ்டாலினை கடுமையாக சாடிய  அண்ணாமலை

பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது #Gobackmodi என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்த திமுக, Gobackmodi என்ற எழுதப்பட்ட கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

மோடி தற்போது தமிழகத்திற்கு வராத நிலையிலும், வரும் 21ம் தேதி அமித்ஷா வருவதை முன்னிட்டும், கரூரில் பாஜக சார்பில் வேல்யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டம் முழுவதும் Gobackmodi என்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் திமுகவினர்.

”சுடலை ராஜா..’’ ஸ்டாலினை கடுமையாக சாடிய  அண்ணாமலை

இதனால் ஆவேசம் கொண்ட பாஜக தமிழக துணைத்தலைவர் அண்ணாமலை, ‘’உங்கள் கொள்கைகளை நீங்கள் சொல்லுங்கள். எங்கள் கொள்கைகளை நாங்கள் சொல்கிறோம். மக்களுக்கு பிடித்தை தேர்ந்தெடுக்கட்டும். அதைவிட்டுவிட்டு திருட்டுத்தனமாக சேர்த்த பணத்தில் போஸ்டர் ஒட்டியதை உடனே கிழிக்க வேண்டும். வரும் 23ம் தேதிக்குள் போஸ்டரை கிழிக்க வேண்டும். சுவரில் எழுதியதை எல்லாம் அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் 24ம் தேதி முதல் நாங்கள் பெயிண், பிரஸ்சை கையில் எடுப்போம். நீங்கள் எழுதியதற்கு மேல்.. சுடலை ராஜா,( மு.க.ஸ்டாலினை சமூக வலைத்தளங்களில் சுடலை என்று அழைப்பதால்..) ஐந்துகட்சி அமாவாசை( கரூர் எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி அடிக்கடி கட்சி மாறுவதால்..) என்று எழுதுவோம்.

எங்கள் மோடிக்கு மதிப்பு மரியாதையும் கொடுக்காதவர்கள் கரூரில் அரசியல் செய்ய முடியாது.’’என்று எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.