ஷோலே படத்தின் அந்த பேமஸ் டயலாக்… மைக்கில் பேசி சிக்கிய போலீஸ்

 

ஷோலே படத்தின் அந்த பேமஸ் டயலாக்… மைக்கில் பேசி சிக்கிய போலீஸ்

சினிமாவில் வருவதுபோல நிஜத்திலும் செய்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கிகொள்வது வழக்கமாகிவிட்டது மத்திய பிரதேச போலீசாருக்கு.
சிங்கம் படத்தின் இந்தி ரீமேக் படத்தில் அக்‌ஷய்குமார் நிற்பது போல், இரண்டு கார்களின் மீது நின்று போஸ் கொடுத்த போலீஸ் ஒருவர் சிக்கி விமர்சனத்திற்கு உள்ளானார்.

ஷோலே படத்தின் அந்த பேமஸ் டயலாக்… மைக்கில் பேசி சிக்கிய போலீஸ்

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஜாபுவா பகுதியில் உள்ள கல்யாண்புரா போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஒருவர், ரோந்து பணியின்போது, ஜீப்பில் உள்ள ஒலிப்பெருக்கியில் ஷோலே படத்தில் வரும் பிரபலமான வசனத்தை பேசியுள்ளார்.
இதை சிலர் வீடியோவாக எடுத்து வலைத்தளங்களில் பதிவிட, அது வைரல் ஆனது. கூடவே சர்ச்சையும் ஆனது. பலர் இந்த வீடியோவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் எதிர்ப்புதான் வலுத்தது.

இதையடுத்து மாவட்ட கூடுதல் காவல் ஆணையர் ஆனந்த் சிங், சம்பந்தப்பட்ட போலீசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளக்கம் வந்த பிறகு அந்த போலீஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.