மலபார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்; கேரளாவில் தொடரும் அவலம்

 

மலபார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்; கேரளாவில் தொடரும் அவலம்

கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க எத்தனையோ அறிவுறுத்தல்கள் இருந்தும் காமம் என்ற ஒன்று அதையெல்லாம் மறைத்துவிடுகிறது. கொரோனா தொற்று உள்ள பெண்ணிடம் மும்பையில் மருத்துவமனை பாதுகாவலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அதிரவைத்தது. கேரளாவில் இதுமாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது கவலை அளிக்கிறது.

மலபார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்; கேரளாவில் தொடரும் அவலம்

திருவனந்தபுரத்தில் கொரொனா பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சுகாதாரத்துறை அதிகாரி பிரவீன் போலீசின் பிடியில் சிக்கினார். பத்தினம் திட்டாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வண்டியை நிறுத்திய ஆம்புலன்ஸ் டிரைவர் அந்த பெண்ணை பாலியன் வன்கொடுமை செய்த பிறகே மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

கொரொனா ஒரு கொடுமை என்றால் கொடுமையிலும் கொடுமையாக கேரளாவில் தொடர்ந்து இப்படி பல சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சி அளித்து வரும் நிலையில், கோழிக்கோட்டிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

மலபார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்த இளம்பெண் கடந்த வியாழக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் பெற்றோரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளம்பெண் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பரிசோதனை என்ற பெயரில் ஆள் இல்லாத இடத்திற்கு எல்லாம் வரவழைக்கப்பட்டு தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதால் போலீசில் புகாரளித்திருக்கிறார் அப்பெண்.

இளம்பெண்ணின் குற்றச்சாட்டு குறித்து அதோலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரளாவில் தொடரும் இந்த அவலம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.