இளைஞரின் தலையை துண்டித்து சர்ச் வாசலில் வீசிச்சென்ற கும்பல் கைது

 

இளைஞரின் தலையை துண்டித்து சர்ச் வாசலில் வீசிச்சென்ற கும்பல் கைது

ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு சென்று வழிபடுவது கிறிஸ்துவர்கள் வழக்கம். அப்படித்தான் நேற்றைய தினமும் மதுரை கீழவாசல் செயிண்ட் மேரிஸ் சர்ச்சில் வழிபட்டுவிட்டு வெளியே வந்தனர். சர்ச் வாசல் பக்கம் பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி. சிலர் மயங்கி விழுந்தனர். சிலர் துணிந்து ஓடிவந்து அருகே சென்று பார்த்தனர். துண்டுக்கப்பட்ட இளைஞரின் தலை கிடந்தது. ரத்தம் வழிந்தோடி கிடந்தது.

உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கவும், கீரைத்துறை போலீசார் விரைந்து வந்து தலையினை கைப்பற்றி விசாரணையில் இறங்கினர். அதற்குள் அந்த கொலை சம்பவம் குறித்த வீடியோ ஒன்றும் போலீசாருக்கு கிடைத்தது. அந்த சம்பவம் நடந்தபோது பொதுமக்களில் ஒருவர் தனது செல்போனில் எடுத்த வீடியோவை போலீசாருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இளைஞரின் தலையை துண்டித்து சர்ச் வாசலில் வீசிச்சென்ற கும்பல் கைது

அந்த வீடியோவில், சர்ச் ஓரமாக சாலையில் நடந்து சென்ற இளைஞரை ஒரு கார் மேகமாக வந்து வழிமறிக்கிறது. அதிலிருந்து இறங்கியவர்கள் அந்த இளைஞரை நோக்கி வரவும், அந்த இளைஞர் ஓடுகிறார். பின்னாலேயே துரத்தி வந்த கும்பல் இரும்புகம்பியால் கடுமையாக தாக்குகிறார்கள். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவரை கொடூரமாக தாக்குகிறார்கள். பின்னர் தலையை மட்டும் தனியே துண்டித்து எடுத்து சர்ச் வாசலில் வீசிவிட்டு காரில் தப்பித்து செல்கிறார்கள்.

இந்த வீடியோவை வைத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உயிரிழந்தவர் கீழ்மதுரையை சேர்ந்த முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகானந்தம் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர் போலீசார்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.