மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 17 பேர் கைது

 

மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 17 பேர் கைது

பிரதமர் மோடிக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 17 பேர் கைது

கொரோனா இரண்டாவது அலையில் தொற்றின் தீவிரம் அதிகரித்து நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தடுப்பூசிக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து தகவல் வந்த வண்ணம் இருக்கின்றன.

மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 17 பேர் கைது

தடுப்பூசிகள் செலுத்தியதில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது என்று பிரதமர் மோடி சொல்லி வந்த நிலையில், தடுப்பூசிகள் தட்டுப்பாடு எப்படி வந்தது? நம் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் பரபரப்பு நிலவியது.

மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய 17 பேர் கைது

இந்த போஸ்டர்கள் தொடர்பாக டெல்லியில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 17 பேரும் கூலிக்கு போஸ்டர் ஒட்டியவர்கள் என்பது தெரியவந்ததால், போஸ்டர் அச்சடித்தது யார்? ஒட்டச்சொன்னது யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் போலீசார்.