சந்தி சிரிக்கும் தோழிகள் விவகாரம்:ஸ்நாக் வீடியோ வில்லங்கம்

 

சந்தி சிரிக்கும் தோழிகள் விவகாரம்:ஸ்நாக் வீடியோ வில்லங்கம்

டிக்டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்திருப்பதால் அதற்கு மாற்றாக அதே போல் இருக்கும் ‘ஸ்நாக் வீடியோ’விற்கு அதிகம் பேர் அடிமையாகி இருக்கிறார்கள். டிக்டாக்கினால் பல குடும்பங்கள் சீரழிந்ததுபோலவே இந்த ஸ்னாக் வீடியோவினாலும் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. கொண்டாட்டத்தில் ஆரம்பித்து கடைசியில் பலரை திண்டாட்டத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது. அப்படித்தான் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் தோழிகள் ராஜவதனி – மேகவாணி.

சந்தி சிரிக்கும் தோழிகள் விவகாரம்:ஸ்நாக் வீடியோ வில்லங்கம்

புதுச்சேரி வேல்ராம்பட்டில் துலுக்காணத்தம்மன் நகரில் வசிக்கும் ராஜவதனி, டிக்டாக் மோகம் கொண்டவர். முதல் கணவரை விவாரத்து செய்துவிட்டு இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வரும் இவர், டிக்டாக் தடைக்கு பிறகு ஸ்நாக் வீடியோ மோகம் கொண்டு அதிலேயே காலம் கழித்திருக்கிறார். 80களில் வந்த பாடல்களுக்கு கலக்கல் டான்ஸ் ஆடி பலரையும் ஈர்த்திருக்கிறார்.

அப்படித்தான் அவர் மேகவாணி என்ற பெண்ணையும் ஈர்த்திருக்கிறார். அவரும் புதுச்சேரியை சேர்ந்தவர்தான். திருமால்நகை சேர்ந்த மேகவாணி்யின்
கணவர் பாலசுப்பிரமணியன் ஒடிசா சிறையில் இருப்பதால் எந்நேரமும் ஸ்நாக் வீடியோவில் மூழ்கி கிடந்திருக்கிறார் மேகவாணி. இதனால் அவருக்கு ராஜவதனியின் நட்பு கிடைத்திருக்கிறது. மூன்று மாதங்களாக அடிக்கடி இருவரும் நேரில் சந்தித்து ஊர் சுற்றி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் நகை, பணம் கொடுத்திருக்கிறார் மேகவாணி.

சந்தி சிரிக்கும் தோழிகள் விவகாரம்:ஸ்நாக் வீடியோ வில்லங்கம்

திடீரென்று இவர்களுக்குள் என்ன ஆனதோ தெரியவில்லை. கொடுத்த நகை, பணத்தை எல்லாம் திரும்ப கேட்டு ராஜவதனியிடம் சண்டை போட்டிருக்கிறார் மேகவாணி. இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை முற்றியிருக்கிறது

முதலியார் பேட்டை காவல்நிலையத்தில் மேகவாணி கொடுத்த புகாரின் பேரில் ராஜவதனியிடம் இருந்து 1 லட்சம் பணத்தை திரும்ப வாங்கி கொடுத்திருக்கிறார்கள். மேலும், வக்கீலுடன் சேர்ந்துகொண்டு தனது வீட்டை அபகரிக்க பார்க்கிறார் என்று ராஜவதனி மீது மேகவாணி கூறிய குற்றச்சாட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சந்தி சிரிக்கும் தோழிகள் விவகாரம்:ஸ்நாக் வீடியோ வில்லங்கம்

ஆனாலும், ராஜவதனியின் வீட்டு வாசலில் நின்று அடிக்கடி சத்தம் போட்டு கொடுக்க வேண்டிய நகைகளையும், மீதிப்பணத்தையும் கேட்டு மேகவாணி சத்தம் போட்டு வருவதால், அந்த ஏரியாவே கூடிவிடுகிறதாம். இதனால், ‘’என் மானம் போச்சுன்னா உசிர விட்டுடுவேன்’’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறர் ராஜவதனி.

ஸ்நாக் வீடியோவினால் சந்தி சிரிக்கும் தோழிகள் விவகாரம் புதுச்சேரி முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.