காதலித்து ஏமாற்றிய பெண் போலீஸ்! உயிருக்கு ஆபத்தான நிலையில் பைனான்சியர்!

 

காதலித்து ஏமாற்றிய பெண் போலீஸ்! உயிருக்கு ஆபத்தான நிலையில் பைனான்சியர்!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபு(25), திருச்சியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அப்போது பெண் போலீஸ் வைதேகிக்கும் பிரபுவுக்கும் பழக்கம் உண்டாது. இந்த பழக்கம் நாளடைவில் காதலானது. இந்த சூழ்நிலையில் வைதேதி திருச்சியில் இருந்து திருவாரூருக்கு பணிமாற்றலாகி சென்றார்.

வைதேகியை பிரிந்து இருக்க முடியாது என்று பிரபு சொன்னதால், திருவாரூர் காவல குடியிருப்பிலேயே வைதேகியுடன் தங்கினார் பிரபு. திருமணம் ஆகாமலேயே கணவன் – மனைவியாக வாழ்ந்தி வந்தனர்.

காதலித்து ஏமாற்றிய பெண் போலீஸ்! உயிருக்கு ஆபத்தான நிலையில் பைனான்சியர்!

இதற்கிடையில் திரூவாரூரில் இருந்து மன்னார்குடிக்கு பணி மாற்றப்பட்டார் வைதேகி. இந்த முறையாவது முறைப்படி திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்ற முடிவில் வைதேகியின் பெற்றோரிடம் பேசினார் பிரபு. அவர்கள் தங்கள் மகளை கட்டிக்கொடுக்க மறுத்துள்ளனர்.

பெற்றோர் இந்த முடிவை சொன்னபிறகு வைதேகியின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. பிரபுவுடன் பேசுவதையும் பழகுவதையும் குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில், என்னை மறந்துவிடு. வேறு யாரையாவது பாத்து கல்யாணம் செய்துக்கோ என்று வைதேகி சொல்லிவிட்டார்.


அதன்பின்னர் வைதேகியை பார்க்க போனால் அவர் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அவர் வேலை பார்க்கும் போலீஸ் நிலையத்திலேயே புகார் கொடுத்திருக்கிறார் பிரபு. ஆனால், புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் மனம் உடைந்த பிரபு, விஷம் குடித்துவிட்டார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் பிரபுவை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபு சிகிச்சை பெற்று வருகிறார்.