17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா

 

17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா

ஓசூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் சித்தப்பா உள்ளிட்ட 8 பேர் போக்சோவில் கைது செய்தனர்.

17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா

அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டி ஊராட்சி பேடரள்ளி கிராமத்தில் வசிக்கும் மாதப்பன் மகன் கேசவன்(21) அதே ஊரை சேர்ந்த 17வயது பிளஸ் 2 மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது. மாணவிக்கு கேசவன் சித்தப்பா உறவுமுறை எனக் கூறப்படும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் , அதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். கேசவன் கடந்த மே மாதம் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கேசவன் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில், மாணவியின் பெற்றோரை கேசவன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிரட்டி தாக்கியுள்ளனார். இதையடுத்து மாணவி நேற்று தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார், புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் சம்பூர்ணம் மாணவியை கர்ப்பமாக்கிய கேசவன், தந்தை மாதப்பன்(33), உறவினர்கள் வாசன்(22), பச்சமுத்து(25), கிருஷ்ணன்(30),அழகேசன்(28), பச்சப்பன்(32), ஆனந்தன்(28) ஆகிய 8 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.